TP logo

காமராஜர் பற்றி கட்டுரை: Kamarajar Katturai in Tamil Essay Speech

காமராஜர் பற்றி கட்டுரை. Here I have listed kamarajar katturai in Tamil easy, Speech about kamarajar in Tamil essay, kamarajar patri katturai potti காமராஜர் பேச்சு போட்டி, naan kamarajar aanal speech in tamil, and Kamaraj history in Tamil pdf.

இங்கே கொடுத்துள்ள காமராஜர் கட்டுரையை, நீங்கள் பல தலைப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ((நான் விரும்பும் தலைவர் காமராசர், கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் காமராஜர் ஆனால் கட்டுரை, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை)

kamarajar katturai in tamil

குறிப்பு சட்டகம்: காமராஜர் கட்டுரை

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

விடுதலைப் போரில் காமராஜர்.

  • முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய பணிகள் கல்விப் பணிகள் நாட்டுப்பணி

படிக்காத மேதை காமராஜர்

  • காமராஜரின் பண்புநலன்கள்

காமராசர் தன்னுடைய எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். மக்கள் இவரை, படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி, பெருந்தலைவர், செயல் வீரர், கர்ம வீரர், கிங் மேக்கர் என்றெல்லாம் அன்புடன் அழைத்தனர்.

நம் நாட்டின் விடுதலைக்காகவும், கல்வி மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தன்னலமற்ற தலைவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவர் தந்தையார் குமாரசாமி நாடார், தாயார் சிவகாமி அம்மாள் ஆவர்.

காமராஜருக்கு பெற்றோர் இட்ட பெயர், காமாட்சி என்பதாகும். ஆனால் அவரது தயார் செல்லமாக ராசா என்றே அழைத்தார், நாளடைவில், காமாட்சி மற்றும் ராசா இணைந்து, காமராசு என்றானது.

தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை 6 ஆம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார். அதற்குமேல் பள்ளிப்படிப்பை தொடர அவரிடம் போதிய பணம் இல்லை. அதனால் தன்னுடைய தாய்மாமா கருப்பையாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கிருக்கும்போது நாளிதழ்கள் படித்தும், நம் தேசத் தலைவர்களின் பேச்சுக்களை கேட்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் காட்டினார்.

இந்திய விடுதலை போராட்ட வீரரான சத்தியமூர்த்தி அவர்களின், பேச்சால் ஈர்க்கப்பட்டு, அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

சத்தியமூர்த்தி ஐயா அவர்களை, தன் குருநாதராக ஏற்று கொண்டார்.

மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். மேலும் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், ஆகஸ்டுப் புரட்சி, போன்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

11-வது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். அதன் விளைவாக சுமார் 10 ஆண்டு காலத்தை சிறையில் கழித்தார்.

சிறையில் இருந்த இந்த 10 ஆண்டுகளில் தனது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். ஓரளவிற்கு ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டார். இது பின்னாளில் அவர் முதலமைச்சரான போது அவருக்கு பெரிதும் உதவியது.

முதலமைச்சராக காமராசர் ஆற்றிய பணிகள்

கல்விப் பணிகள்.

காமராஜர், அவருக்கு முன்பு ஆட்சியில் இருந்த ராஜாஜி அவர்கள் மூடிய பல பள்ளிக்கூடங்களை மீண்டும் திறந்து வைத்தார். மேலும், பல பள்ளிக்கூடங்களை கட்டினார். இதனால் தமிழ் நாட்டில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 27,000 ஆனது.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் 9 விழுக்காடாக இருந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை, 37 விழுக்காடாக மாறியது. கல்வியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார்.

நாட்டுப்பணி

காமராஜரின் நாட்டுப்பணி இன்றளவும் பலரால் பாராட்டப்படுகிறது. தமிழகத்தின் நீர் வளத்தை பெருக்க, பல அணைகளை கட்டினார். அணைகள் மூலம் கிடைத்த நீர்வளத்தை வைத்து மின்சாரத்தை பெருக்கினார். அவரின் ஆட்சி காலத்தில், தமிழகம் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே, முதல் மாநிலமாக திகழ்ந்தது.

பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினார். தொழில்துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற செய்தார்.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வைப்பு நிதி, காப்புறுதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

அவரது ஆட்சி காலத்தில், தமிழ் நாட்டில் ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

கிண்டி தொழிற்பேட்டை, இராணிப்பேட்டை, அம்பத்தூர் போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை , சென்னை இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), சர்க்கரை ஆலை, மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் (CPCL), சிமெண்ட் தொழிற்சாலை , மேட்டூர் காகிதத் தொழிற்சாலை , நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மலை கிராமங்கள் இருந்தன. அவற்றிற்கு நீர் வழங்குதல் என்பது படித்த பல பொறியாளர்களுக்கே கடினமான செயலாக இருந்தது. ஆனால், மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, பலரும் வியக்கும்படி மாத்தூர் தொட்டிப் பாலத்தை கட்டினார். ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இப்பொழுதும் இது உள்ளது.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், காமராஜர் அறிவு கூர்மை மிக்கவர். தமிழ் நாட்டில் எத்தனை குளங்கள், ஏரிகள் உள்ளன. விவசாயத்திற்கு அந்த நீர் வளங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும்.

பல சிக்கலான திட்டங்களை அவர் எளிதாக செய்து காட்டினார். இதனால், காமராஜரை மக்கள் “ படிக்காத மேதை ” எனப் போற்றினர்.

காமராசரின் பண்புநலன்கள்

காமராசர் உயர்பண்புகள் மிக்கவர். பணம் மற்றும் நகைகள் மீது நாட்டம் இல்லாமல், எளிமையாகவே வாழ்ந்தவர். சுருக்கமாக பேசினாலும், செயலில் கெட்டிக்காரர்.

தனக்கென வாழாமல், நாட்டிற்காக தன வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர். கண்டிப்பானவர்; சுதந்திர போராட்ட வீரர்.

அவர் இறந்தபோது சில துணிகளையும், சட்டை பையில் சிறிதளவு பணத்தையும் மட்டுமே வைத்திருந்தார். சொந்த வீடு இல்லாமல், இறுதி வரை வாடகை வீட்டிலேயே எளிமையாக வாழ்ந்த, தியாக செம்மல் கர்ம வீரர் காமராஜர்.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையால் பாதிக்கப்பட்டாலும், விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் தாய் நாட்டுபற்றால், நம் தேசத்தின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

ஒப்பற்ற தலைவர் காமராஜர் காந்தி ஜெயந்தியன்று 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மக்கள் இன்றும் காமராஜரின் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர். தான் மறைந்தாலும், தன்னுடைய செயல் மற்றும் பண்புகளால், அழியாது மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு காமராஜருக்கு, மத்திய அரசு “ பாரத ரத்னா ” விருது வழங்கி சிறப்பித்தது.

மேலும் மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராஜரின் நினைவாக, சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை வைத்துள்ளனர்.

kamarajar katturai in tamil easy | கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf | எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை | நான் காமராஜர் ஆனால் கட்டுரை பேச்சு போட்டி| naan kamarajar aanal speech in tamil | காமராஜர் பேச்சு போட்டி

  • விடுப்பு விண்ணப்பம் ஆறாம் வகுப்பு 6th Std
  • முகத்தை வெள்ளையாக மாற்ற எளிமையான அழகு குறிப்புகள்
  • பளபளக்கும் முகத்தை பெற கற்றாழையை பயன்படுத்துவது எப்படி?
  • முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள்

இந்த தக்காளி பேஸ் பேக் முகத்தை அழகாக ஜொலிக்க வைக்கும்

Kamaraj History (English Version)

Here is the speech about kamarajar in Tamil. It consists of a kamarajar essay in Tamil and Kamaraj history Tamil and also previously, I have given the kamarajar katturai in Tamil. For the school students, kamarajar katturai in Tamil pdf and karmaveerar kamarajar speech in tamil for students are beneficial in their exams.

For those who don’t know Tamil, here is the English version of the Tamil speech about kamarajar, and the detailed History of the kamarajar essay in Tamil. naan kamarajar aanal speech in tamil. Here is the kamarajar short speech in Tamil for the competition.

Introduction: Kamarajar Katturai in Tamil

Kamarasar is known for his simplicity and honesty. People affectionately call him the uneducated genius, the southern Gandhi, the black Gandhi, the great leader, the activist, the karmic warrior, and the King Maker.

Speech about Kamarajar in Tamil: Birth and Early Life

Chief Kamaraj was born on July 15, 1903, in Virudhunagar. His father is Kumaraswamy Nadar and his mother is Sivagami Ammal.

The name given to Kamaraj by his parents is Kamatchi. But his ready pet was called Rasa, and in the course of time, Kamatchi and Rasa together became Kamarasu.

Due to the death of his father, he dropped out of school in the 6th grade. On top of that, he did not have enough money to continue his schooling. So his mother went to work in the uterus store.

While there he read the newspapers and listened to the speeches of our national leaders and became interested in the freedom struggle.

History of Kamaraj in Tamil: Freedom Struggle 

Satyamurthy, an Indian freedom fighter, was inspired by his speech and took part in politics and freedom struggles.

Lord Sathyamoorthy accepted them as his Guru.

Mahatma Gandhi accepted the invitation of the steps and attended the Salt Satyagraha. He also took part in many struggles such as the Non-Cooperation Movement, the Illegal Movement, and the August Revolution.

He took part in the freedom struggle at the age of 11. As a result, he spent about 10 years in prison.

During these 10 years in prison he developed his academic knowledge. He also learned to speak English to some extent.

Kamarajar Essay in Tamil: Kamarajar as Chief Minister

The work done by Kamaraj as the Chief Minister of Tamil Nadu is immeasurable. Revivalist in various fields such as water management, industry, electricity, education and employment.

Educational Reforms

Kamaraj, Rajaji who was in power before him reopened many of the schools they had closed. Also, built many schools. Thus the number of schools in Tamil Nadu became 27,000.

Introduced free lunch program for schoolchildren in Tamil Nadu.

As a result, the number of school-going children increased from 9 percent to 37 percent. He caused a revolution in education.

Public Work

Kamaraj’s work is still admired by many today. He built many dams to augment the water resources of Tamil Nadu. He multiplied the electricity by keeping the water available through the dams. During his reign, Tamil Nadu became the first state in India to generate electricity.

Created many new factories. Made Tamil Nadu self-sufficient in industry.

He introduced three major schemes for government employees: pension, deposit fund, and insurance.

During his reign, he completed nine irrigation projects in Tamil Nadu.

He set up factories at places like Kindi Industrial Estate, Ranipet, and Ambattur.

He established various factories such as the Neyveli Coal Mine Factory, the Chennai Railway Box Factory (ICF), the Sugar Mill, the Sand Petrol Refinery (CPCL), the Cement Factory, the Mettur Paper Factory, and the Nilgiris Photo Scroll Factory.

There were many hill villages in the Kanyakumari district. Providing water for them was a difficult task for many educated engineers. But, to alleviate the drinking water problem of the people, Mathur showed the tank bridge. It is still the largest tank bridge in Asia.

Kamarajar Speech Tamil: Uneducated genius Kamaraj

Although he had studied only up to the sixth standard, Kamaraj was very intelligent. In Tamil Nadu, it has ponds and lakes. He knows very well how to use those water resources for agriculture.

He made many complex projects easy. Thus, Kamaraj was hailed by the people as an “uneducated genius”.

Kamarajar Tamil Katturai: Characteristics

The kamarajar is high-minded. Who lived simply, without a penchant for money, and jewmore intelligentriefly speaking, actively smarter.

He did not live for himself but dedicated his life to the country. கண்டிப்பானவர்; Freedom Fighter.

When he died he had only a few clothes and a small amount of money in his shirt pocket. Without sacrificing his own house, Kamaraj lived a simple life in a rented house until the end.

Born into a very simple family and suffering from poverty, with more effort, hard work, and patriotism, he rose to the level of electing this Prime Minister.

People still talk about Kamaraj’s good governance. He lives in the minds of immortal people, through his deeds and attributes, despite his forgetfulness.

Unparalleled leader Kamaraj Gandhi died of natural causes in 1975 on Jayanti.

In 1976, Kamaraj was honored with the Bharat Ratna by the Central Government.

The University of Madurai is also known as the Madurai Kamarasar University. In memory of Kamaraj, the domestic terminal of the Chennai Airport is named after Chief Kamaraj.

காமராஜர் கட்டுரை. Here I have listed kamarajar katturai in Tamil easily, Speech about kamarajar in Tamil essay, karmaveerar kamarajar speech in tamil for students and Kamaraj history in Tamil.

இங்கே கொடுத்துள்ள காமராஜர் கட்டுரையை, நீங்கள் பல தலைப்புகளுக்கு (கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் விரும்பும் தலைவர் காமராசர், naan kamarajar aanal speech in tamil, நான் காமராஜர் ஆனால் கட்டுரை பேச்சு போட்டி,  எனக்கு பிடித்த தலைவர் கட்I hope) பயன்படுத்திக்கொள்ளலாம்.

Hope you got the speech about kamarajar in Tamil. It comprises Kamaraj history in Tamil and kamarajar essay in Tamil. Above I have written the kamarajar katturai in Tamil easy. For the 6th standard school students, kamarajar katturai in Tamil is beneficial in their exams.

For those who don’t understand Tamil, here is the English version of Tamil speech about kamarajar, kamarajar essay in Tamil, and history. கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் காமராஜர் ஆனால் கட்டுரை, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை, நான் விரும்பும் தலைவர் பேச்சு போட்டி, காமராஜர் பற்றி கட்டுரை. 

Related Posts

dog names in Tamil

100+ Dog Names in Tamil – நாய்குட்டி Male and Female Dog Nicknames

Fish Names in Tamil

150+ Fish Names in Tamil and English with Pictures (மீன் பெயர்கள் – Fish Varieties)

Three Letter Words in Tamil

500+ மூன்று எழுத்து சொற்கள் – Three Letter Words in Tamil

dried fig benefits tamil

உலர்ந்த அத்திப்பழம் பயன்கள் & தீமைகள் | Dried Fig Benefits Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

History tamil

History Tamil

Kamarajar history in Tamil

Kamarajar history in Tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar history in Tamil

காமராசர் வாழ்க்கை வரலாறு:

Kamarajar history in Tamil: தமிழகத்தின் ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என்றால் அது காமராஜர் என்று பலராலும் அறியப்பட்ட ஒன்று. கல்வி என்ற ஒற்றை சொல்லை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதற்கு வழி வகுத்ததால் இவர் “கல்விக்கு கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.

காமராசர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதனை தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்ததால் இவர் “தென்னாட்டு காந்தி” என்றும் அழைக்கப்படுகிறார்.

மக்களுக்காக எண்ணற்ற நலன்களை செய்த காமராசரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் வாழ்க்கை வரலாற்றையும் மேலும் அவர் நடத்திய ஆட்சி முறை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.

Biography of kamarajar in Tamil

• காமராஜரின் பிறந்தநாள் – ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்

• காமராஜர் பிறந்த ஊர் – இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம்

• காமராஜரின் படிப்பு – இளம் வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியவில்லை

• காமராஜரின் பெற்றோர் – குமாரசாமி மற்றும் சிவகாமி

• காமராஜரின் இறப்பு – அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆவது வருடம்

காமராஜரின் பிறப்பு: 

குமாரசாமி நாடார் மட்டும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் மகனாக பிறந்தார். தம்முடைய இளம் வயதிலேயே அவருடைய தந்தை இறந்ததால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

காந்தி பற்றிய முழு தகவல்கள்

காமராஜர் என்னும் பெயர் வர காரணம்:.

Kamarajar history in Tamil: குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் பிறந்தார் காமராஜர். மேலும் குமாரசாமி நாடார் தம்முடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் மூலம் இவர் பிறந்தார் என கருதி “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். ஆனால் அவருடைய தாயார் சிவகாமி அம்மையார் அவ்வாறு அழைக்காமல் “ராஜா” என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் “காமாட்சி + ராஜா = காமராஜர்” இரண்டு பெயர்களும் ஒன்றாக இணைந்து காமராஜர் என்று ஆனது.

காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜரின் தாயாரான சிவகாமி அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அதில் ஒருவரான கருப்பையா நாடார் என்பவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். காமராஜர் இளம் வயதிலேயே தம்முடைய தந்தையை பிரிந்ததால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவும் அவருடைய மாமாவான கருப்பையா நாடார் துணிக்கடையிலேயே வேலையில் சேர்ந்தார்.

காமராஜரின் அரசியல் ஈடுபாடு:

kamarajar history in tamil pdf: துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சுதந்திர போராட்டப் பேச்சுக்களை கேட்பதில் ஆர்வமாக இருந்தார், அப்போது வரதராசலூர் நாயுடு, சத்தியமூர்த்தி மற்றும் திரு வி கா ஆகியோரின் தேச பெருந்தலைவரின் அரசியல் பேச்சைக் கேட்டு அவருடைய மீது கொன்ற பற்று காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

மேலும், 1920 ஆம் ஆண்டு காமராஜரின் தன்னுடைய 16 வது வயதில் “காங்கிரஸ்” கட்சியில் ஒரு சிறு தொண்டனாக சேர்ந்து நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எண்ணற்ற விடுதலை போராட்டத்தில் இறங்கி செயல்பட தொடங்கினார்.

காமராஜர் கட்சியில் மேன்மேலும் வளர்தல்:

ஆரம்பத்தில் காமராசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது பொதுக்கூட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கு பேசும் அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்பது என்று இருந்தார். பின்னர் அவரின் அதீத அரசியல் ஈடுபாடு காரணமாக நேரடியாக கட்சியில் இறங்கத் தொடங்கினார் காமராஜர்.

perunthalaivar kamarajar history in tamil – மேலும், காங்கிரஸ் கட்சிக்காக கொடி கட்டுவதில் இருந்து தொடங்கி மக்களுக்கு கொடுக்கப்படும் துண்டு பிரச்சாரங்களை தாமே இறங்கி அனைவருக்கும் விநியோகிக்க தொடங்கினார். இவரது ஆர்வத்தை பார்த்த காங்கிரஸ் கட்சியானது அவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை அளித்தது.

அப்போதைய காலகட்டங்களில் காமராஜர் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்காமல் கட்சி மற்றும் கட்சி பணிகள் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவருடைய பெற்றோர் அவருடைய வாழ்க்கை கெட்டி விடுமோ எனக் கருதி அவரை கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் காமராஜருக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் அவர் வீட்டிலேயே இருப்பார் எங்கும் செல்ல மாட்டார் என்று கருதி அவருக்கு திருமண பேச்சு நடைபெற்றது ஆனால் அதனை அடியோடு தவிர்த்து விட்டார் காமராஜர்.

காமராஜர் முதல் முறையாக சிறை செல்லுதல்:

அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்பின் மீதான இறக்குமதி வரி விண்ணை தொடவே, காந்தியடிகள் உப்பிற்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மேலும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற படியும் அவர் செய்தார்.

1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் என பெயரிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டவர்.

மேலும் அந்த சிறையில் ஒரு வருட காலம் வரை தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

காமராஜரின் அரசியல் முன்னேற்றம்:

அதன் பின்னர் காமராஜர் எண்ணற்ற கட்சிப் பணிகளை செய்து, 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக சத்தியமூர்த்தியும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து ஒன்றின் வழக்கில் காமராஜர் முக்கிய கைதியாக சேர்க்கப்பட்டார். அப்போது வழக்கறிஞராக இருந்த வரதராசு நாயுடு என்பவரின் வழக்காடும் திறமையால் காமராஜரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் காமராசர் விடுதலை பெற்றார்.

அதற்குப் பின்னரும் மேலும் பல வழக்குகளில் கைதான காமராஜர் 9 மாதங்கள் வரை சிறையில் இருந்தார்.

1942 ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டதால் 3 ஆண்டுகள் வரை சிறை செல்லும் நிலை ஏற்பட்டது.

காமராஜர் தமிழக முதல்வர் ஆகுதல்:

அப்போது கட்சி தலைமையில் இருந்த ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த பல்வேறு சிக்கல்கள் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. மேலும் 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த வாக்கெடுப்பில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்:

காமராஜரின் ஆட்சியில் தான் முதன் முதலில் இலவச கல்வி மற்றும் மாணவர்களுக்கான சீருடை மேலும் மதிய உணவு திட்டம் ஆகிவற்றை அறிமுகப்படுத்தினார்.

அப்போது நாட்டில் மூடப்பட்டு கிடந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் திறந்து, மேலும் 17 ஆயிரம் புதிய பள்ளிக்கூடங்களில் திறக்க வைத்தார்.

இதனால் இவரை மக்கள் அனைவரும் “கல்வி கண்கள் காமராஜர்” என்று அழைக்கின்றனர்.

kamarajar history in tamil: அப்போது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது எண்ணி வேதனை உற்றார். மேலும் வறுமையின் காரணமாகவும் பசியின் காரணமாகவும் சிறு குழந்தைகள் வேலைக்கு செல்வதை உணர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை 27 ஆயிரம் அளவிற்கு அதிகரித்தார் காமராஜர்.

முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் மதிய உணவு திட்டத்தை செயல்பட தொடங்கி வைத்தார். அப்பொழுது மாணவர்கள் ஒருவேளை உணவுக்காக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள் முதலில் ஒரு பள்ளியில் மட்டும் தொடங்கிய காமராஜர் பின்பு 4 பள்ளிகளுக்கு இந்த திட்டம் செயல்படும்படி விரிவு படுத்தினார்.

இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு ஆர்வமற்ற காமராஜர், பின்னர் நாடு முழுவதும் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

முதலில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. அதுவரை 180 நாட்கள் வரை செயல்பட்ட பள்ளிக்கூடங்கள் அனைத்தும் 200 நாட்கள் வரை உயர்த்தப்பட்டது.

அவருக்குப் பின் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நாடு முழுவதும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

காமராஜரின் பொன்மொழிகள் மற்றும் கவிதைகள்:

• நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.

• தாய்மார்கள் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.

• எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாத அதிகாரம் என்றும் நிலைக்காது.

• ஒரு பெண் படிப்பது ஒரு குடும்பத்திற்கு படிப்பதற்கு சமம் என்பதாகும்.

காமராஜரும் தமிழ்நாடு:

• காமராஜர் பதவியேற்றதும் முதலில் நாட்டு முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்ற கல்வி தொழில் ஆகிய வீட்டிற்கு முன்னுரிமை அளித்தார்.

• நாட்டில் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி அதே உணவு திட்டத்தையும் செயல்படுத்த தொடங்கினார்.

• காமராஜர் ஆட்சியில் தான் முதல் முதலில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் முக்கியமானதாக, பவானி திட்டம், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய் திட்டம், வைகை அனைத்திட்டம், ஆழியாறு பாசன திட்டம், காவேரி டெல்டா வடிகால் வாரியத் திட்டம், பரம்பிக்குளம் மற்றும் கிருஷ்ணகிரி அரணியாறு ஆகிய நதித்திட்டங்களை ஆரம்பித்தும் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.

• உலகிலேயே முதல் முறையாக குடிநீருக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டி பாலம் ஒன்றை காமராஜர் கட்டிக் கொடுத்தார். இதுதான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தொட்டி பாலமாக இருந்து வருகிறது.

• மேலும் நாட்டில் எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு ஆலைகள் இரும்பு பெட்டி ஆலைகள் ஆகியவற்றை கொண்டு வந்தார்.

காமராஜர் கொண்டு வந்த தொழிற்சாலைகளின் பெயர்கள்:

1. நெய்வேலியில் முதல் முதலில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.

2. பாரத மிகு மின் உற்பத்தி நிறுவனம் செயல்படுத்தப்பட்டது.

3. சென்னையில் உள்ள மணலி என்ற சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.

5. நிலக்கரி புகைப்பட சொல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

6. மேலும் மருத்துவ பணிக்காக கிண்டி அரசு மருத்துவமனையில் சோதனை கருவிகள் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

7. மேட்டூரில் காகித தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

8. பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை

9. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத் கேவி எலக்ட்ரிகல்ஸ்.

10. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்.

11. ஊட்டியில் உள்ள கச்சா ஹிட் பிலிம் தொழிற்சாலை.

12. கிண்டி டெலிபோன்டர் தொழிற்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு – தேசத்தந்தை:

• காமராஜர் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

• தன் வாழ்வில் திருமணம் கூட செய்யாமல் மக்களின் முன்னேற்றம் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்து வந்தார்.

• நாட்டில் இளைஞர்களின் முன்னேற்றத்தை காத்தில் கொண்டு ராமராஜர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் சேர்ந்தார்.

• தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்த காமராஜர் அவர் ஒரு வார்த்தை சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரையே நியமித்து விடலாம் என்ற அந்த அளவிற்கு அவர் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர்:

1. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் முதலில் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

2. அதன், பின்னர் வந்த இரண்டாவது தேர்தலில் அதாவது 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர்.

3. பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

காமராஜரும் விவசாயிகளுக்கு செய்து நன்மையும்:

காமராஜர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10,000 மேற்பட்ட பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நாலடிவில், வந்த கலைஞர் ஆட்சியில் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நாடு முழுவதும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் காமராஜர் நினைவு சின்னங்கள்:

1. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் சிலைகள் வைக்கப்பட்டது.

2. சென்னையில் உள்ள கிண்டியில் காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.

3. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் தொடர்பான வாழ்க்கை வரலாற்று படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மேலும் காமராஜருக்கு மணிமண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

காமராஜரின் வேறு சில பெயர்கள்:

• தென்னாட்டு காந்தி

• படிக்காத மேதை

• வைக்கம் வீரர்

• பெருந்தலைவர்

• கர்மவீரர்

• கல்விக்கு கண் திறந்தவர்

காமராஜரின் ஆட்சியை பற்றி சில வரிகள்:

• இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க முதலமைச்சர்கள் ஒருவராக காமராஜர் தம் ஆட்சியின் மூலம் இந்திய மக்களுக்கு அனைவருக்கும் தனியாக தெரிந்தார்.

• கல்விக்கு கண் திறந்த காமராஜர் தமிழகத்தை 9 ஆண்டு காலம் வரை ஆட்சி செய்து வந்தார்.

• மன்னர் காலத்தை தவிர்த்து காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பலராலும் அறியப்பட்டது.

• காமராஜர் ஆட்சியில் தான் முதன் முதலில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

• எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், ஏழைகளுக்கு நல்லது செய்து வந்த காமராஜரின் இறப்புக்கு பின்னர் “பாரத ரத்னா” என்னும் விருது 1976 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு முழு தகவல்கள்:

• ஜூன் மாதம் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்த நாளான அன்று நாட்டின் “கல்வி வளர்ச்சி நாளாக “தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

• அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 2020 ஆம் வருடம் கன்னியாகுமரியில் காமராஜரின் பெயரில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் “காமராஜர் அரங்கம்” ஒன்றை தமிழக அரசு நிதி உள்ளது.

• மேலும் இவரை கௌரவப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் அவருடைய திருவுருவ சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையம் ஒன்றில் காமராஜரின் பெயரை சூட்டி பெருமை படுத்தி உள்ளது.

• மேலும் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் எளிமை குணம்:

kamarajar history in tamil pdf download: காமராஜர் தான் முதலமைச்சராய் இருந்த ஒன்பது ஆண்டு காலமும் தனக்கென்று ஒரு வீட்டை கூட கட்டிக் கொள்ளவில்லை. அவர் இதுவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடைகள் அணிவதிலும் எளிமையே பின்பற்றி வந்தார் கதர் சட்டை மற்றும் புதிய எண்ணமும் காணப்படுவார். எண்ணற்ற பெரும் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்து வைக்கும் தன்னலமற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

காமராஜரின் மறைவு:

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆம் ஆண்டு காமராஜர் இவ் உலகை விட்டு மறைந்தார். சாதாரணமான தோற்றமும் தன்னலமற்ற வாழ்க்கையும் வாழ்ந்த காமராஜர் அவர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும் அவர் நடத்திய ஆட்சி இந்த உலகம் உள்ளவரை பேசப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

Read Also: 

History tamil

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Recent Posts

  • 20 Days Pregnancy Symptoms In 2024 – கர்ப்பத்திற்க்கான முதல் 20 நாள் அறிகுறிகள்
  • குரு பெயர்ச்சி பலன்கள் 2024 || Guru Peyarchi 2024 to 2025 Tamil
  • விநாயகர் அகவல் || Vinayagar Agaval in Tamil
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் || 12-ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
  • பொது அறிவு வினா விடைகள் || GK Questions in Tamil
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • IPL 2024 NEWS (23)
  • Tech News (2)
  • Uncategorized (4)
  • ஆன்மீகம் (19)
  • கவிதைகள் (16)
  • செய்திகள் (22)
  • மருத்துவ குறிப்புகள் (44)
  • வரலாறு (25)
  • Privacy Policy
  • Terms and Conditions

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu
  • Tamil Essays

Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

' src=

Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil professor of Madurai University. Students can use it for school projects

Kamarajar Essay In Tamil

காமராஜர் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்து  பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

  • காமராஜர் ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய பயின்றார்
  • 1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யா சாலையிலும் .
  • பின்னர் விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியிலும் பயின்றார் .
  • அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர்,
  • தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்க பட்டார்

தனது 16 வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரஸ் இல் தன்னை இணைத்து கொண்டார்

1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம்   நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார்.

மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்

தமிழக முதல்வராக

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.தன்னுடைய முதல் பணியாக  குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு,  மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

17000த்திற்கும் மேற்பட்ட புதிய  பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தினார். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

  • தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்
  • நெய்வேலி நிலக்கரித் திட்டம்
  • பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
  • திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
  • கல்பாக்கம் அணு மின்நிலையம்
  • ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை
  • கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
  • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
  • சேலம் இரும்பு உருக்கு ஆலை
  • பாரத மிகு மின் நிறுவனம்
  • இரயில் பெட்டித் தொழிற்சாலை
  • நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என
  • மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன
  • மேட்டூர் கால்வாய்த்திட்டம்
  • பவானி திட்டம்
  • காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
  • மணிமுத்தாறு, அமராவதி, வைகை சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்

காங்கிரஸ் தலைவர்

  • கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்
  • 1963 அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்
  • 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.
  • 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.

I like this

this is very nice

Comments are closed.

' src=

You Might Also Like

Essay about rain in tamil – மழை கட்டுரை, வ.உ.சிதம்பரனார் கட்டுரை vo chidambaram in tamil essay, சரோஜினி நாயுடு sarojini naidu biography in tamil.

  • வாழ்த்துக்கள்

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar history in tamil

  • Kamarajar history in tamil

காமராசரின் வாழ்க்கை வரலாறு | Kamarajar history in tamil

Kamarajar history in tamil – 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டி என்னும் கிராமத்தில் குமாரசாமி சிவகாமி தம்பதிக்கு மகனாய் பிறந்தார் காமராஜர்.

பெயர் காரணம் :

தங்களது குலதெய்வ பெயரான காமாட்சி என்ற பெயரையே பெற்றோர் காமராஜருக்கு சூட்டியனர்.பெற்றோர் ராஜா என்று செல்லப் பெயராக அழைத்ததால் அக்கம்பக்கத்தினரும் அப்படியே அழைக்க காமாட்சி எனும் பெயரானது காமராஜர் என்றானது.

பள்ளி வாழ்க்கை :

Kamarajar Biography in Tamil -அந்தக் காலத்தில் நீதி கட்சி தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி என்பதால் எங்கெல்லாம் நீதி கட்சியின் கூட்டம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் எதிர் கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வதே காமராஜர் வழக்கமாக கொண்டிருந்தார்.

பள்ளிப்படிப்பில் பெரும் ஆர்வத்தைக் காட்டி வந்தார் காமராஜர். அப்பொழுது திடீரென்று ஒரு அதிர்ச்சி செய்து வந்தது,அதுவே அவர் தந்தை குமாரசாமியின் மரணம் ஆகும்.

அரசியல் வர காரணம் :

இதன் காரணமாய் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு குடும்ப வறுமையை ஈடுகட்ட வெளி வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.அப்பொழுது காமராஜரின் தாய்மாமன் கருப்பையா தான் குடும்பத்திற்கு உதவி செய்தார். அவர் நடத்தி வந்த துணிக்கடையில் தான் வேலை தந்தார்.

Kamarajar history in tamil -அந்தத் துணிக்கடையையே காமராஜருக்கு அரசியலை கற்றுத் தந்தது.சுதந்திர போராட்டம் உச்சந்தொட்ட காலம் கட்டம் என்பதால், பொதுக்கூட்டம் வாயிலாக சுதந்திர உணர்ச்சியை மக்களுக்கு கொண்டு சேர்த்திருந்தன.

அந்த வீட்க்கை காமராஜரையும் தொற்றிக் கொண்டது. வரதராஜலு நாயுடு,சத்தியமூர்த்தி, திரு வி போன்றோரின் சுதந்திரத்தை நோக்கிய பேச்சு காமராஜருக்குள் அரசியல் ஆர்வத்தை தூண்டியது.

சிறப்பு பெயர்கள்:

கட்சி தொண்டன் காமராஜர் :

Kamarajar Biography in Tamil -காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்கு செல்வது காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை கேட்பது என்று இருந்த காமராஜர் ஒரு கட்டத்தில் நேரடி அரசியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சிக்கு கொடி கட்டுவது தொடங்கி மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிப்பது வரை கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்தார்.

இதனை காரணம் காட்டி கட்சியில் முக்கிய பொறுப்பையும் பெற்றார்.ஆனால் அரசியலில் ஈடுபடுவதால் காமராஜரின் எதிர்காலம் வீணாகி விடுமோ என்று அச்சப்பட்ட குடும்பத்தினர்கள் காமராஜரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே ஒரு மரக்கடையில் வேலை செய்தாலும் அங்கேயும் கட்சி வேலை செய்வதாக குடும்பத்திற்கு செய்தி வர அவரை மீண்டும் சொந்த ஊருக்கே வரவைத்து விட்டனர். இன்சுரன்ஸ் ஏஜென்சி வேலை பெற்று தந்தாலும் காமராஜரின் விருப்பம் முழுவதும் அரசியல் மீதே இருந்தது.

திருமணம் செய்து வைத்தாலும் குடும்பத்தை சுற்றியே இயங்குவார் என எண்ணினாலும் அந்த வாய்ப்பை அடியோடு நிராகரித்த காமராஜர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

சிறை வாழ்க்கை :

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான உப்பு சக்தி என்ற மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாட்டிலும் மிகச் சிறப்பாக நடந்த போது அந்தப் போராட்டத்தில் இளைஞராக கலந்து கொண்டு சிறை சென்றார் காமராஜர்.இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் காமராஜர்.

அதுவே தன் வாழ்க்கையில் முதல் முறையாய் சிறைவாசம் கண்டார் காமராஜர்.சிறையில் இருந்து வெளிவந்த பிறகு காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கலந்து நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார் காமராஜர்.

அனைத்து போராட்டத்திலும் கலந்து கொண்டதால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து மாநில பொறுப்பிற்கு உயர்ந்தார் காமராஜர். சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் என்ற பதவியானது அவருக்கு கிடைத்தது.

கட்சியில் காமராஜருக்கு செல்வாக்கானது உயர விருதுநகர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்தார் என்று அவர் மீது வெடிகுண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வெற்றி பாதை :

காங்கிரஸ் தலைவர்களின் சட்ட ரீதியான வழக்கால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் காமராஜர்.அதனைத் தொடர்ந்து காமராஜரின் அரசியல் பாதையில் தொடர்ந்து ஏர்முகம் தான்.1936 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் தேர்தல் :

Kamarajar history in tamil -1937 இல் தான் காமராஜர் முதல் முதலில் தேர்தலை சந்தித்தார்.அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தந்தார் தலைவர் சத்தியமூர்த்தி.சொந்தத் தொகுதியில் போட்டியிட்ட காமராஜரை எதிர்த்து யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என்ற காரணத்தினால் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அன்று முதல் கட்சிப் பணி மக்கள் பணி என்று சுற்றி சுழன்று செயல்பட்டார்.இதன் காரணமாகவே 1940 இல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர்.அந்த சமயத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு இருந்த காமராஜர் தேர்தலில் வெற்றி பெற்றார் காமராஜர்.

சொந்தக் கட்சியினரே வியந்தனர்:

ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக 1942 ஆம் ஆண்டு காந்தி ஆகஸ்ட் புரட்சியை அறிமுகம் செய்தார். அந்தப் போராட்டத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு பம்பாய் சென்றார் காமராஜர்.

அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆவணங்களை ரயில்வே வழியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் சேர்த்தார். கட்சிக்காக எப்பேர்வு ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்த காமராஜரை கண்டு சொந்தக் கட்சியினரே வியந்தனர்.கட்சியில் காமராஜருக்கு இருந்த மதிப்பு மென்மேலும் உயர தொடங்கின.

தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்த காந்தி அர்ஜியின் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதினார்.அதில் ராஜாஜிக்கு எதிராக ஒரு குழு செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிய காமராஜர் தான் வகித்து வந்த ஆட்சி மன்ற குழு பதவியை ராஜினாமா செய்தார்.காந்தியை எதிர்த்து காமராஜரின் இந்த துணிவை கட்சிக்குள் காமராஜரின் மதிப்பை உயர்த்தியது.

கிங் மேக்கர் :

Kamarajar history in tamil -1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் அருப்புக்கோட்டை பகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர்.அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக முத்துரங்கரை முன்முகழ்ந்தார் காமராஜர்.

ஆனால் தீ பிரகாசம் என்றவரே வெற்றி பெற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் காமராஜரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை பொறுப்பேற்காமலையே இருந்தார்தீ பிரகாசம்.இதனால் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் குழப்பம் ஏற்பட தொடங்கியது.முதலமைச்சர் பிரகாசத்திற்கு எதிராக அடுத்தடுத்து அதிர்ச்சி குரல்கள் எழும்ப தொடங்கின.இதன் விளைவாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிரகாசம். இதன்பின் நடந்த சட்டமன்ற குழு தேர்தலில் காமராஜர் நிறுத்திய ஓமந்தூர் ராமசாமி வெற்றி பெற்று முதல்வாரானார்.

இங்கிருந்தே காமராஜரின் கிங்மேக்கர் ஆட்டமானது தொடங்கியது. இதுவே லால் பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்க பயணம் தொடங்கியது. சட்டமன்றத்தில் சுவாரசியமாக உரையாற்றுவது கைதட்டல்களை பெறுவதெல்லாம் காமராஜருக்கு துளியும் விருப்பமில்லை.

மாறாக மக்களுக்காக வேண்டிய திட்டங்களை நோக்கி கவனம் செலுத்தினார்.அதே சமயம் கட்சி பணிகளிலும் காமராஜரின் ஆர்வம் உயர்ந்து கொண்டே இருந்தன. நேர்மையான முதலமைச்சராக இருந்த போதும் ஓமந்தூர் ராமசாமிக்கு கட்சியிலேயே பலரும் போர்க்கொடி தூக்க ஓமந்தூராரை பதவி விலக செய்துவிட்டு அவருக்கு பதிலாக பி எஸ் குமாரசாமி ராஜாவை முதலமைச்சர் ஆக்கினார் காமராஜர். இதன் மூலமாக இரண்டாவது முறையாக கிங்மேக்கர் ஆகியிருந்த காமராஜர் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் செல்வாக்கு பெற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டிய சூழல் உருவானது.வருபுறம் மைனாரிட்டி அரசை அமைக்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முன் வரவில்லை.மறுபுறம் ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியை தக்க வைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.அப்போதுதான் அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து இருந்த ராஜாஜி மீண்டும் அரசியலில் இணைத்து முதலமைச்சர் ஆக்கினார் காமராஜர்.

அரசியல் எதிர்க்கும் ஆட்சியை கொடுத்திருக்கிறார் காமராஜர் என்ற பேச்சியும் எழுத்தொடங்கின. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் அமைச்சர் ராஜாஜி புதிய கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தார்.

பெற்றோர் செய்யும் தொழிலை அவர்களின் வாரிசும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் போல புல கல்வி திட்டம் என்று விமர்சித்த எதிர்க்கட்சிணர்கள் ராஜாஜி கொண்டு வந்து அந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.அத்திட்டத்தில் காமராஜருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் திட்டத்தைக் கொண்டு வருவதில் ராஜாஜி பிடிவாதம் காட்டினார். இதனால் கட்சிக்குள் அதுற்ப்த்தி எழவே முதலமைச்சர் பதவியை விளகினார் ராஜாஜி.

காமராஜர் முதலமைச்சர் ஆன கதை :

அடுத்து யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பார்வை காமராஜர் மீது பட்டது.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ஏற்க சம்மதித்தார் காமராஜர். ஆனால் அவருக்கு எதிராக ராஜாஜியின் ஆதரவுடன் சி சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டிருந்தார். போட்டியின் முடிவில் ஸ்ரீ சுப்பிரமணியத்துக்கு 41 வாக்குகள் மட்டுமே கிடைக்க அவரைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதலமைச்சர் ஆனார் காமராஜர்.

Kamarajar history in tamil – முதலமைச்சருகாக தன்னை எதிர்த்துப் போட்டிக்கு நிறுத்தப்பட்டிருந்த சி சுப்பிரமணியத்தின் அறிவு ஆற்றல் அனுபவத்தை அங்கீகரித்து அவரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் காமராஜர்.அதேபோல தன்னை எதிர்த்து முன்மொழிந்த வேட்பாளர் பச்சவத்தலையும் தன்னுடைய அரசியல் நிர்வாக அனுபவத்தை அங்கீகரித்து அமைச்சராக்கினார் காமராஜர்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரும் ரெட்டமலை சீனிவாசனின் பேரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆக்கி பெரும் புரட்சி செய்த காமராஜர் புல கல்வி திட்டத்தை ரத்து செய்தார்.

காமராஜர் முதலமைச்சர் ஆனாலும் அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர் அல்ல.எனவே முதலமைச்சர் பதவியை நீடிக்க குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார்.புலக்கல்வி திட்டத்தை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்போது புதிதாக தொடங்கப்பட்டிருந்த திமுக காமராஜருக்கு ஆதரவித்தது.

அந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டிருந்த கம்யூனிஸ்ட் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் காமராஜர்.எப்போதும் மக்கள் நலம் பற்றி யோசிக்கும் முதலமைச்சர் என்பதால் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம், அமராவதி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர் திட்டம் புளம்பாடி நீர்த்தேக்க திட்டம் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து மத்திய அரசிடம் தன்னிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பல திட்டங்களை கொண்டு வந்தார்.

மதிய உணவு திட்டம்:

Kamarajar history in tamil -காமராஜரின் கருணை உள்ளத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் மதிய உணவு திட்டம்.பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் காமராஜர். ஒரு கட்டத்தில் மதிய உணவுக்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது.இன்றும் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் ஒன்றான இத்திட்டம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.இதன் காரணமாகவே அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் காமராஜர்:

1957-இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர்.அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் காமராஜர்.

Kamarajar history in tamil -சென்னை கிண்டி அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிக்சர்ஸ் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை,நெய்வேலி நிலக்கரி சுருங்குங்கள்,சேலம் உருக்காலை, சென்னை ஆவடி ராணுவ தளவாடை தொழிற்சாலை,பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, அரக்கோணம் இலகுணகை இயக்கம் தொழிற்சாலை உள்ளிட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயன்றார் முதலமைச்சர் காமராஜர்.

மாநில தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் காமராஜர் முழிப்புடன் செயல்பட்டார்.இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பேட்டைகளை நிர்மாணிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 159 நூற்பாலைகள், 30 லட்சம் நுற்ப்புகதிர்கள்,8000 துணி நூட்பு பாவுகள்,அதிக எண்ணிக்கையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

சென்னை வண்டலூர் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக ஆண்டுக்கு 3000 கார்கள்,1500 ட்ரக்குகள்,இன்ஜின்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக சின்சன் இந்தியா பிஸ்டன், டிவிஎஸ்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.முக்கியமாக பனியன் கம்பெனிகள் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்தது.விவசாயிகளின் நிலையை பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களுக்காகவே கிராமப்புறத்தில் இணைக்கப்பட்ட மின்சாரத்தில் 70% மின்சாரம் விவசாய மோட்டார் பம்ப்ஷேடுகளை இயக்க பயன்படுத்தப்பட்டது.

Kamarajar history in tamil -1963ல் மொத்தமாக 10,000 விவசாய பம்ப் செட்டுகள் தமிழ்நாட்டு மின்சாரம் கொண்டு விவசாயத்திற்கு இயக்கப்பட்டது. காமராஜர் காலத்தில் ஒரு பக்கம் மக்கள் நலத்திட்டங்கள் தூய்மையாக நடந்து கொண்டிருந்தாலும் சட்டம் ஒழுங்கு சார்ந்த சில பிரச்சனைகள் இருக்கவே செய்தன. அவற்றில் முக்கியமானது முதுகுளத்தூர் கலவரம் தேர்தல் பிரச்சனை தொடர்பாக இரு கட்சிகளில் இருந்த மோதல் இரு சமுதாயத்தினருக்கான மோதலாக மாறியது.

அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு சர்ச்சைக்குள்ளானது.அரசியல் சர்ச்சைகள் ஆயிரம் இருந்தாலும் ஆக வேண்டிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்தால் காமராஜர்.காமராஜரை அரசியல் களத்தில் ஆவேசமாக குரல் கொடுத்தவர்களும் களமாடியவர்களமே பாராட்டுவதும் போற்றுவதும் என்ற அதிசயம் நிகழ்ந்தது.

மூன்றாவது முறையாகவும் காமராஜரே முதலமைச்சர் :

எதிர்க்கட்சியினர்களும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்திய காமராஜருக்கு 1962 தேர்தலில் வெற்றியை தந்து மூன்றாவது முறையாகவும் காமராஜரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து நீங்கினார் காமராஜர்:

Kamarajar history in tamil -அதே சமயம் அரசியல் ரீதியாக அவருக்கு கவலை குள்ளானது தேர்தல் முடிவுகள். அந்தத் தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிரியாக திமுக உருவெடுத்தது.

அந்த வெற்றியை மற்றவர்கள் எல்லாம் வெரும் வீக்கம் என்று சொன்னபோது, காமராஜர் மட்டுமே திமுக வளர்கிறது என்று துல்லியமாக கணித்தார்.அப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்படுத்தியிருந்தது.

அந்த சரிவில் இருந்து காங்கிரசை மீட்டெடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்,அதுக்கு பதவியில் இருக்கும் தலைவர்களை நீக்கி கட்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்றால் காமராஜர்.அந்தத் திட்டத்தை நேருவிடம் சொல்லும்போது அதை ஏற்றுக் கொண்ட நேரு அதற்கு காமராஜர் திட்டம் அதாவது கே பிலேன் என்று பெயரை வைத்தார்.

அதற்காக முதலமைச்சர் பதவியில் இருந்து நீங்கினார் காமராஜர்.காமராஜர் பதவி விலகல் முடிவை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.1954 இல் காமராஜர் தொடர்ச்சியாக முதலமைச்சராக வேண்டும் என்றவர் பெரியார் தான்.

Kamarajar history in tamil – காமராஜரின் ஆட்சியை கண்ணை மூடி ஆதரிக்க வேண்டும் என்றார் பெரியார். பிரச்சார பீரங்கியாக பெரியாரின் விடுதலை பத்திரிக்கை செயல்பட்டது.ஒருவேளை காமராஜர் பதவி விளங்கினால் அதுக்கு காங்கிரஸ் தற்கொலை செய்ததற்கு ஒப்பானது என்றார் பெரியார்.ஆனாலும் கட்சி பணிக்காக முதலமைச்சர் பதவியில் இருந்து விளங்கினார் காமராசர்.

காமராஜா மரணம்:

தன் வாழ்நாளில் மக்களுக்குப் பல சேவைகளைச் செய்த மக்கள் தலைவர் காமராஜர் தனது 72வது வயதில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மரணம் அடைந்தார்.

எளிமையின் மறுபக்கம் காமராஜர் :

Kamarajar history in tamil -ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இறக்கும் வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். மேலும் அவரிடம் கதர் ஆடைகள் மட்டும் தான் இருந்தன.

மேலும் அவரது வங்கிக் கணக்கில் கூட டெபாசிட் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் தனக்காகச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அத்தகைய தலைவர் அரிதாகவே இருப்பார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kanakkanpatti Siddhar History In Tamil – சித்தர்கள் , சிவ பக்தர்கள். மனம், மொழி, பொருளில் இருந்து மறைந்தவர்கள்…

Three Letter Words in Tamil – வணக்கம் நண்பர்களே இன்றைய இலக்கியப் பதிவில் மூன்றெழுத்து வார்த்தைகளை பதிவிட்டுள்ளோம்.

Surrogacy Meaning In Tamil – அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கம்.! இன்று நமது பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள…

  • இந்திய விழாக்கள், பண்டிகைகள்
  • நடிகர்கள், நடிகைகள்
  • ஆன்மீக தலைவர்கள்
  • இசையமைப்பாளர்கள்
  • எழுத்தாளர்கள்
  • சமூக சீர்திருத்தவாதிகள்
  • சமூக சேவகர்கள்
  • சுதந்திர போராட்ட வீரர்கள்
  • தொழிலதிபர்கள்
  • நாட்டிய கலைஞர்கள்
  • விஞ்ஞானிகள்
  • விளையாட்டு வீரர்கள்

Search on ItsTamil

கு. காமராஜர்.

short essay about kamarajar in tamil

 தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 15, 1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

இறப்பு: அக்டோபர் 2, 1975

நாட்டுரிமை: இந்தியன்

கு. காமராஜர் அவர்கள், 1903  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும்  அமைந்தது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:

டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:

‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜர்:

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:

காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்:

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

“உன்னைப்போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை!!!”

Recent Posts

Shahrukh-Khan

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

PB_Sreenivas

பி. பி. ஸ்ரீனிவாஸ்

Manoj_Kumar

மனோஜ் குமார்

Dhirubhai-Ambani

திருபாய் அம்பானி

Bharathiraja

Related Posts

Radhakrishnan

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

Vijayakanth

மு. கருணாநிதி

E-V-Ramasamy

ஈ. வெ. ராமசாமி

R. K. Shanmukham Chetty

ஆர். கே. சண்முகம் செட்டியார்

R. Venkataraman

ஆர். வெங்கட்ராமன்

short essay about kamarajar in tamil

நேர்மையின் மருவுருவமாக வாழ்ந்த காமராஜரை பற்றி இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அற்புதம்!!!!!!!!!!

short essay about kamarajar in tamil

the details about kamarajar is wonderful

short essay about kamarajar in tamil

Thiru. Kamarajar avargal oru manidhar alla avar intha ulagil valntha deivam.

short essay about kamarajar in tamil

காமராஜரை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.நன்றி!!!

short essay about kamarajar in tamil

kamarajar is great

the details are very useful

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar History in Tamil

காமராஜர் வாழ்க்கை வரலாறு:

சிறை வாழ்க்கையும் படிப்பும், அரசியல் குரு.

satyamurti - சத்தியமூர்த்தி

எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !

அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு , அணைக்கட்டுகள்:.

sathanur dam

தொழில் நிறுவனங்கள்:

இறுதிக் காலம், share this:.

short essay about kamarajar in tamil

மூன்றாம் பானிபட் போர் | 3rd Panipat War in Tamil

தெனாலிராமன் கதைகள் - உலகிலேயே வெண்மையான பொருள் எது?

Related Stories

short essay about kamarajar in tamil

Abraham Lincoln History in Tamil | ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு

short essay about kamarajar in tamil

பிரமிட் மர்மங்கள் (ரகசியம்) | Secrets of Egypt Pyramid in Tamil

short essay about kamarajar in tamil

Thomas Alva Edison History in Tamil | தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

Post a comment.

Short Essay

Kamarajar Essay – 100, 500, 1000 Words & 10 Lines

Kamarajar Essay: Explore the impactful life of K. Kamarajar, a key political figure in Tamil Nadu. This Kamarajar Essay delves into his leadership, emphasizing contributions to education, social reform, and governance. Discover how Kamarajar’s legacy shaped Tamil Nadu’s development and left an enduring impact on Indian politics.

Explore Kamarajar’s unwavering commitment to public service, his visionary leadership, and the enduring impact of his contributions, particularly in the realms of education and social justice. This Kamarajar Essay provides a captivating introduction to the man behind the moniker “Karmaveerar” — the Hero of Work — inviting readers to delve into the remarkable story of a leader who touched the hearts of the masses.

Kamarajar Short Essay - in 100 words

Table of Contents

Kamarajar Essay in 10 Lines

The Kamarajar Essay highlights the life and contributions of K. Kamarajar, a revered leader in Indian politics. It explores his role in education reforms, social welfare, and his simplicity. Kamarajar’s impact on the state of Tamil Nadu is discussed, emphasizing his dedication to public service.

  • K. Kamaraj, born in 1903, was a prominent Indian politician and statesman.
  • His political journey began during the Indian independence movement in the 1930s.
  • Kamaraj served as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963.
  • He initiated the groundbreaking “Kamaraj Plan” focused on educational reforms.
  • The mid-day meal scheme, introduced by Kamaraj, aimed at improving child nutrition.
  • His leadership fostered significant economic progress and social development in Tamil Nadu.
  • Kamaraj was known for his simplicity, integrity, and influential role in national politics.
  • He played a pivotal role in the Indian National Congress, earning the title “Kingmaker.”
  • Kamaraj’s legacy endures as a beacon of good governance and grassroots development.
  • His contributions are annually commemorated on his birth anniversary as “Education Development Day.”

Also See: 20 Lines Essay on Swachh Bharat Abhiyan in Sanskrit

Kamarajar Short Essay – in 100 words

This brief Kamarajar Essay provides insights into the life and contributions of K. Kamarajar, a stalwart leader in Tamil Nadu. Explore his role in education, social reforms, and governance, leaving an indelible mark on the state’s development and political landscape.

Perunthalaivar Kamarajar: A Beacon of Leadership

Perunthalaivar Kamarajar, born in 1903 in Virudhunagar, Tamil Nadu, transcended humble beginnings to become a revered leader in Indian politics. His life, marked by simplicity and dedication, left an indelible mark on Tamil Nadu’s history.

Kamarajar’s political journey began with the Indian National Congress, where he quickly gained prominence for his commitment to public service. Serving as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, he implemented transformative educational reforms. The introduction of the Mid-day Meal Scheme, a groundbreaking initiative, remains a testament to his vision for social progress.

Known as “Karmaveerar” for his unwavering dedication, Kamarajar’s legacy endures as a symbol of selfless leadership and a catalyst for positive change in Tamil Nadu.

Kamarajar Essay in 500 Words

Delve into the comprehensive account of K. Kamarajar’s impactful journey, examining his multifaceted role in politics, education, and social transformation in Tamil Nadu. This Kamarajar Essay explores the enduring legacy of the leader who played a pivotal role in shaping the state’s progress.

Kamarajar: Architect of Progress and Social Welfare

Kumaraswami Kamaraj, fondly known as Kamarajar, stands as a towering figure in Indian politics, renowned for his transformative leadership and unwavering commitment to progress and social welfare. Born in 1903 in Virudhunagar, Tamil Nadu, his journey unfolded against the backdrop of the Indian independence movement.

As a stalwart leader, Kamarajar served as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, leaving an indelible mark on the state’s governance. His tenure was characterized by visionary initiatives, foremost among them being the “Kamaraj Plan.” This groundbreaking educational reform aimed to enhance accessibility and quality, revolutionizing the education landscape in Tamil Nadu. His emphasis on education stemmed from a profound belief that empowering the youth through knowledge was the key to societal progress.

One of Kamarajar’s most iconic contributions to social welfare was the introduction of the mid-day meal scheme for schoolchildren. This initiative, way ahead of its time, addressed not only educational but also nutritional needs, ensuring that young minds were nourished for a brighter future. The mid-day meal scheme has since become a model for similar programs across the country.

Under Kamarajar’s leadership, Tamil Nadu witnessed remarkable economic and social development. His policies facilitated growth in agriculture, industry, and infrastructure, laying the foundation for the state’s prosperity. Kamarajar’s governance was marked by a harmonious blend of progress and social justice, reflecting his commitment to building a more equitable society.

Beyond regional influence, Kamarajar played a pivotal role in national politics. His strategic acumen and ability to bridge diverse interests earned him the moniker “Kingmaker” within the Indian National Congress. Kamarajar’s influence extended far beyond the borders of Tamil Nadu, contributing significantly to the party’s dynamics at the national level.

Simplicity and integrity were the hallmarks of Kamarajar’s personality. Despite his prominent political stature, he remained connected to the grassroots, resonating with people from all walks of life. His ability to connect with the masses and prioritize their needs over personal gain made him a beloved leader, often referred to as the “People’s King.”

Kamarajar’s legacy endures as a symbol of good governance and grassroots development. His contributions are annually commemorated on his birth anniversary, celebrated as “Education Development Day.” This day serves as a reminder of his visionary leadership, emphasizing the pivotal role of education in shaping a progressive and just society.

Kamarajar Essay in English in 1000 Words

This comprehensive Kamarajar Essay delves into the multifaceted life of K. Kamarajar, exploring his political career, educational reforms, and enduring impact on Tamil Nadu’s development. The narrative navigates through Kamarajar’s visionary leadership, shedding light on his pivotal role in shaping the state’s progress.

Essay on Topic: Tamil Nadu Chief Minister Kamarajar from 1954 to 1963

Introduction

India’s political landscape witnessed a transformative era from 1954 to 1963 under the dynamic leadership of Kumaraswami Kamaraj, fondly known as Kamarajar. Born in 1903 in Virudhunagar, Tamil Nadu, Kamaraj’s journey from humble beginnings to the helm of political power marked a significant chapter in the state’s history. This essay explores the visionary leadership, policies, and lasting impact of Kamarajar during his tenure as the Chief Minister of Tamil Nadu.

Early Life and Entry into Politics

Kamarajar’s foray into politics was shaped by the tumultuous times of the Indian independence movement. Inspired by Mahatma Gandhi’s call for freedom, Kamaraj joined the struggle against British colonial rule. His early activism laid the foundation for a political career characterized by unwavering dedication to the principles of justice, equality, and social welfare.

Chief Ministerial Tenure

In 1954, Kamaraj assumed the office of Chief Minister of Tamil Nadu, a role he would hold for almost a decade. His leadership was marked by a rare combination of pragmatism and idealism, setting the stage for a period of unprecedented progress and development in the state.

Educational Reforms – The Kamaraj Plan

One of Kamaraj’s most significant contributions was the initiation of the revolutionary “Kamaraj Plan” for educational reform. Recognizing the pivotal role of education in societal advancement, Kamaraj aimed to make quality education accessible to all. The plan focused on expanding school infrastructure, improving teacher-student ratios, and promoting literacy. This transformative initiative laid the groundwork for Tamil Nadu’s emergence as an educational hub.

The plan’s impact extended beyond quantitative metrics. It instilled a renewed sense of optimism and aspiration among the people, especially in rural areas where educational opportunities were historically limited. Kamaraj’s commitment to education was a visionary move that aimed not only at immediate development but also at fostering a knowledge-based society for the future.

Social Welfare Initiatives

Kamaraj’s governance was characterized by a deep concern for the well-being of the common man. One of his most enduring legacies in this regard was the introduction of the mid-day meal scheme for schoolchildren. This pioneering initiative addressed both educational and nutritional needs, ensuring that young minds were nourished for a brighter future. The success of this program has echoed across the decades, influencing national policy and becoming a model for similar schemes worldwide.

Economic Progress and Industrial Development

Kamaraj’s tenure witnessed significant strides in economic progress and industrial development. His policies aimed at creating an environment conducive to growth, attracting investments and fostering entrepreneurship. Tamil Nadu, under his leadership, became a hub for industries, contributing substantially to the state’s economic prosperity.

Kamaraj’s vision extended beyond urban centers, with a focus on rural development. Agricultural reforms and infrastructural investments in rural areas aimed at uplifting the agricultural community and bridging the urban-rural divide. This comprehensive approach to development ensured that the benefits of progress reached every corner of the state.

Political Acumen and National Influence

While Kamaraj was a regional leader as the Chief Minister of Tamil Nadu, his influence extended far beyond state borders. His political acumen and ability to bridge diverse interests earned him the moniker “Kingmaker” within the Indian National Congress. Kamaraj’s role in shaping national politics during this period was instrumental, contributing significantly to the dynamics of the party at the central level.

Simplicity and Integrity

Despite his political prominence, Kamaraj remained rooted in simplicity and unblemished integrity. Known as the “People’s King,” he connected with the masses on a personal level. This authenticity endeared him to the people, making him a beloved leader irrespective of political affiliations.

Legacy and Commemoration

Kamaraj’s legacy endures as a symbol of good governance, social welfare, and visionary leadership. His contributions are annually commemorated on his birth anniversary, celebrated as “Education Development Day.” This day serves as a reminder of the enduring impact of Kamaraj’s initiatives in education and social welfare, emphasizing the crucial role of these factors in shaping a progressive and just society.

In conclusion, Kumaraswami Kamaraj’s tenure as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963 was a transformative period in the state’s history. His visionary leadership, marked by educational reforms, social welfare initiatives, and economic progress, set Tamil Nadu on a trajectory of sustained development. Kamaraj’s legacy, characterized by simplicity, integrity, and a deep commitment to the welfare of the people, continues to inspire generations and stands as a testament to the transformative power of leadership dedicated to the progress of society.

The Kamarajar Essay provides an insightful overview of K. Kamarajar’s life, underscoring his immense contributions to the development of Tamil Nadu. From political achievements to educational reforms, Kamarajar’s legacy remains a beacon of inspiration.

His commitment to public welfare and tireless efforts for societal betterment make him an enduring figure in Indian history, reflecting the values of leadership, integrity, and service. The conclusion emphasizes the lasting impact of Kamarajar’s work and invites reflection on the lessons contemporary leaders can draw from his exemplary life.

Related Essays

Essay on Modern Indian Woman

Essay on Modern Indian Woman – 100, 500, 1000 Words, 10 Lines

Essay on Future of English in India

Essay on Future of English in India – 10 Lines, 500 & 1000 Words

Essay on Bhai Dooj

Essay on Bhai Dooj – 10 Lines, 100, 500, 1000 Words

Essay About Ooty

Essay About Ooty – 10 Lines, 500 & 1000 Words

Draupadi Murmu Essay

Draupadi Murmu Essay – 10 Lines, 100, 500, 1000 Words

Computer Essay

Computer Essay – Short Essay, 10 Lines, 500 & 1000 Words

Leave a comment cancel reply.

Save my name, email, and website in this browser for the next time I comment.

TAMIL KATTURAI

காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை | Kamarajar Sadhanaigal Speech In Tamil

Table of Contents

காமராஜர் செய்த சாதனைகள் | Kamarajar Sadhanaigal Speech In Tamil

Kamarajar Sadhanaigal Speech In Tamil: “கிங்மேக்கர்” மற்றும் “தென்னிந்தியாவின் காந்தி” என்றும் அழைக்கப்படும் கே.காமராஜின் மரபு இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 1954 முதல் 1963 வரை தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய காமராஜர் கல்வி, அரசியல் சீர்திருத்தம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.

இந்தக் கட்டுரையில் காமராஜர் சாதனைகள் பற்றி விரிவாக பார்ப்போம், அவரது தொலைநோக்கு தலைமை,கொள்கைகள் மற்றும் இந்திய அரசியலில் நீடித்த தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியலில் நுழைவு

தமிழ்நாட்டின் விருதுநகரில் ஜூலை 15, 1903 இல் பிறந்த காமராஜர் (Kamaraj) ஒரு தொலைநோக்கு அரசியல்வாதி மட்டுமல்ல, அயராத சமூக சீர்திருத்தவாதியும், கல்விக்காக தீவிர வாதியும் ஆவார். குறைந்த முறையான கல்வி இருந்தபோதிலும், அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். இந்த பகுதி காமராஜரின் ஆரம்பகால வாழ்க்கை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் அவரது எழுச்சி ஆகியவற்றை ஆராய்கிறது.

Kamarajar Sadhanaigal Speech In Tamil

இந்திய தேசிய காங்கிரஸில் காமராஜரின் பங்கு

காமராஜ் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கிய பங்கு வகித்தார், அதன் தலைவராக 1964 முதல் 1967 வரை பணியாற்றினார். கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும், அடிமட்ட தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல நிறுவன சீர்திருத்தங்களை அவர் செயல்படுத்தினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் காமராஜரின் முயற்சிகள் மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்றி இந்த பகுதி விவாதிக்கிறது.

கல்வி சீர்திருத்தங்கள்

Kamarajar Sadhanaigal Speech In Tamil: சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்தியாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, காமராஜர் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்காக “மதிய உணவுத் திட்டம்” என்றும் அழைக்கப்படும் காமராஜர் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார், இதனால் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கவும், இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும் செய்தார். இந்த பகுதி காமராஜின் கல்வி முயற்சிகள் மற்றும் மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பில் அவற்றின் நீண்டகால தாக்கத்தை ஆராய்கிறது.

மதிய உணவு திட்டம் அறிமுகம்

கல்வித் துறையில் காமராஜரின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்படும் காமராஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1960 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

மாணவர் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துதல், இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல் மற்றும் மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் அமோக வெற்றி பெற்றது மற்றும் இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

கல்வி உள்கட்டமைப்பின் விரிவாக்கம்

வளர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேம்பட்ட கல்வி உள்கட்டமைப்பின் அவசியத்தை காமராஜ் உணர்ந்தார். அவரது தலைமையின் கீழ், புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தது. இந்த விரிவாக்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அணுகலை உறுதி செய்தது.

உலகளாவிய ஆரம்பக் கல்வியை மேம்படுத்துதல்

காமராஜர் அனைவருக்குமான ஆரம்பக் கல்வியை அடைவதற்கான இலக்கை முதன்மைப்படுத்தினார். பள்ளி சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அவர் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தினார். காமராஜின் முயற்சிகள் தொடக்கப் பள்ளிகளின் வருகை விகிதங்களில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்தது மற்றும் மதராஸ் மாநிலத்தில் கல்வி முறைக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவியது.

மெட்ரிகுலேஷன் முறை அறிமுகம்

காமராஜ் மெட்ரிகுலேஷன் முறையை அறிமுகப்படுத்தினார், இது தமிழ்நாட்டில் இடைநிலைக் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தியது. மெட்ரிகுலேஷன் தேர்வு இடைநிலைக் கல்விக்கான தரப்படுத்தப்பட்ட வாரியத் தேர்வாக மாறியது, பள்ளிகள் முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறையை உறுதி செய்தது. இந்தச் சீர்திருத்தம் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும், கல்வி முறையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.

தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள்

காமராஜ், மாணவர்களை வேலைவாய்ப்பிற்கான நடைமுறைத் திறன்களுடன் தயார்படுத்துவதில் தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தார். கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க கல்வி முறையில் தொழிற்பயிற்சியை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் காமராஜின் முன்முயற்சிகள் மாணவர்களை வேலைக்குத் தயாரான திறன்களுடன் மேம்படுத்துவதையும் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

உதவித்தொகை மற்றும் நிதி உதவியின் விரிவாக்கம்

நிதிக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, காமராஜர் பல்வேறு உதவித்தொகை திட்டங்களையும் நிதி உதவி திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இந்த முன்முயற்சிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் அவர்கள் உயர் கல்வியைத் தொடரவும் அவர்களின் கல்வித் திறனை உணரவும் உதவுகின்றன.

ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்

தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை காமராஜர் அங்கீகரித்தார். ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தினார், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல் உட்பட. இந்த முன்முயற்சிகள் கல்வியாளர்களின் கற்பித்தல் திறன் மற்றும் கற்பித்தல் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, இறுதியில் மாணவர்களுக்கு பயனளிக்கிறது மற்றும் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்துகிறது.

வயது வந்தோர் கல்வியை மேம்படுத்துதல்

தனிநபர்களை மேம்படுத்துவதிலும் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துவதிலும் வயது வந்தோருக்கான கல்வியின் முக்கியத்துவத்தை காமராஜ் புரிந்துகொண்டார். வயது வந்தோருக்கான கல்வியறிவை ஊக்குவிப்பதற்காகவும், பெரியவர்கள் கல்வியைத் தொடர ஊக்குவிக்கவும் திட்டங்களை செயல்படுத்தினார். இந்த முன்முயற்சிகள் பெரியவர்களிடையே கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்தவும் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும் உதவியது.

சிண்டிகேட் தலைமை

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், “சிண்டிகேட்” எனப்படும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் குழுவை உருவாக்கினார். இந்த பிரிவு சிண்டிகேட்டின் இயக்கவியல் மற்றும் மாநிலத்தில் முடிவெடுப்பதில் அதன் தாக்கத்தை ஆராய்கிறது.

இது காமராஜரின் தலைமைத்துவ பாணியின் சாதனைகள் மற்றும் விமர்சனங்கள் மற்றும் மதராஸ் மாநிலத்தின் ஆட்சியை வடிவமைப்பதில் சிண்டிகேட்டின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்கிறது.

தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கைகள்

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் காமராஜர் உறுதி பூண்டார். முதலீட்டை ஈர்ப்பதிலும், தொழில்மயமாக்கலை ஊக்குவிப்பதிலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை இந்தப் பகுதி விவாதிக்கிறது. இது காமராஜரின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்கிறது.

சமூக சீர்திருத்தங்கள் மற்றும் நல நடவடிக்கைகள்

காமராஜர், விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்தவும், வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் பல சமூக நல திட்டங்களை செயல்படுத்தினார். இந்தப் பிரிவு சுகாதாரப் பாதுகாப்பு, பெண்கள் அதிகாரமளித்தல், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் அவரது முன்முயற்சிகளை ஆராய்கிறது. காமராஜரின் சமூக சீர்திருத்தங்கள் மாநில மக்களின் வாழ்வில் மாற்றியமைக்கும் தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

காமராஜரின் வீழ்ச்சி மற்றும் மரபு

அவரது சாதனைகள் இருந்தபோதிலும், காமராஜின் அரசியல் வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது, 1963 இல் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுத்தது. இந்த பகுதி அவரது வீழ்ச்சிக்கு காரணமான காரணிகளை ஆராய்கிறது மற்றும் இந்திய அரசியலில் அவரது பாரம்பரியத்தை பகுப்பாய்வு செய்கிறது. இன்றைய அரசியல் நிலப்பரப்பில் காமராஜரின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளின் தொடர் பொருத்தம் பற்றியும் இது விவாதிக்கிறது.

விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாடு

விவசாயத்தின் முக்கியத்துவத்தை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காமராஜர் அங்கீகரித்தார், குறிப்பாக மெட்ராஸ் போன்ற விவசாயம் நிறைந்த மாநிலத்தில். உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு ஆதரவை வழங்கவும், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும் விவசாய சீர்திருத்தங்களை அவர் செயல்படுத்தினார்.

விவசாயத் துறையில் காமராஜரின் முன்முயற்சிகளான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், சிறந்த விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நில ஒருங்கிணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்றவற்றை இந்தப் பகுதி ஆராய்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம்

காமராஜர் பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக வலுவான வக்கீலாக இருந்தார். பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் பெண்களை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடங்கினார்.

பெண்கள் நல வாரியங்களை நிறுவுதல், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் வரதட்சணை, குழந்தை திருமணம் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதில் காமராஜின் முயற்சிகளை இந்த பகுதி விவாதிக்கிறது.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சி

Kamarajar Sadhanaigal Speech In Tamil: காமராஜர் ஒரு வெளிப்படையான, திறமையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை நிறுவுவதில் உறுதியாக இருந்தார். அரசாங்க செயல்முறைகளை சீரமைக்கவும், ஊழலை ஒழிக்கவும், பொது சேவை வழங்கலை மேம்படுத்தவும் நிர்வாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

அதிகாரத்துவ சீர்திருத்தங்கள், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி மற்றும் திறமையான பொது நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக உள்ளாட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் காமராஜின் முன்முயற்சிகளை இந்தப் பிரிவு ஆராய்கிறது.

தேசிய அரசியலுக்கான பங்களிப்பு

தமிழ்நாட்டில் அவரது தாக்கத்திற்கு அப்பால், காமராஜர் தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இந்திய தேசிய காங்கிரஸில் அவரது தலைமை மற்றும் தேசிய முடிவெடுப்பதில் அவரது செல்வாக்குமிக்க இருப்பு மூலம் தேசிய அளவில் அரசியல் நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

தேசிய அரசியலில் காமராஜரின் பங்களிப்புகள் மற்றும் அவரது காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திசையை வடிவமைப்பதில் அவரது பங்கை இந்த பகுதி எடுத்துக்காட்டுகிறது.

காமராஜர் ஒரு தொலைநோக்கு தலைவர், ஒரு சமூக சீர்திருத்தவாதி, கல்விக்கு உண்மையாக உழைத்தவர் மற்றும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் இப்படி எல்லாம் பல புகழ்களுக்கு அதிபதியான காமராஜர் அக்டோபர் 2, 1975 இல் தனது 72 வயதில் இறந்தார். இவரது மறைவு இன்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Notifications

Loading notifications... Please wait.

செய்திப்பிரிவு

Published :

Last Updated : 14 Jul, 2023 04:20 AM

Published : 14 Jul 2023 04:20 AM Last Updated : 14 Jul 2023 04:20 AM

கல்விக் கண் திறந்த மகான்

short essay about kamarajar in tamil

அர்ப்பணிப்பு உணர்வும், பிறருக்காக வாழும் உள்ளமும், எளிமையும் எனப் பல பண்புகளை மக்களுக்காக விட்டுச் சென்றவர். அறிவுச் சுடர் என்பதையே அறியாது, வாழ்வும் மனமும் வறுமையில் வாடிப்போய்க் கிடந்து, செய்வதறியாது தவித்த மக்களுக்கு ஒளி விளக்காக விளங்கும்கல்வியைத் தருவதையே முதற்கடமை யாகக் கொண்டிருந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கு.காமராஜர்.

பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எங்கும் பள்ளிக் கூடங்களைத் திறந்ததோடு, ஒருவேளை உணவு காரணமாகக் கல்வியைத் தவிர்த்த ஏழை எளிய மாணவர்களுக்காகவே மதியஉணவு திட்டம் கொண்டு வந்தவர். மக்களுக்கான சேவையை தனதுஎண்ணமும் செயலுமாகக் கொண்டதால் தான், மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு வறுமைக்கோட்டிலிருந்த, கைரேகை மட்டுமே வைக்கத் தெரிந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கே இடம் கொடுத்தவர்.

அதிகாரம் என்ற ஒன்று தன்னிடம் இருப்பதனைக் கல்விக் கூடங்கள் திறக்கவும், தொழிற்கூடங்கள் உருவாக்கவும் நாட்டு நலத்திட்டங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அசாத்திய மனிதர் அவர்.

நேரம் தவறாமை... தள்ளிப்போடும் வழக்கத்தைக் கிள்ளிப்போட்டவர். அன்றாடப் பணிகளை அன்றே செய்து முடித்துவிடவும், அடுத்தநாள் பணியை முதல் நாளிலேயே திட்டமிடும் வழக்கமும் காமராஜரின் 9 ஆண்டுகால முதல்வர் பணிக்கு அச்சாரமாக விளங்கின.

மக்களுக்காகத் தனது பணிக்காலத்தில் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக்கோளைக் கொண்டிருந்ததில் வியப்பு ஏதுமில்லை. எனவேதான், நாடு முழுவதும் அணைகள், தொழிற்கூடங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் உருவாயின. நாட்டினை வழிநடத்திச் செல்ல சிறந்ததலைமையை உருவாக்கும் வழிகாட்டியாக காமராஜர் விளங்கியது இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்ட அற்புதமாகும்.

நாட்டினை வழிநடத்திச் செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதில் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 1963-ம் ஆண்டில் தனது முதல்வர் பதவியைத் துறந்தவர் காமராஜர்.

மூன்று முக்கிய கூறுகள்: 'இவரைப்போல் வேறு ஒருவர் இனிஇல்லை' என்று வாழ்ந்து காட்டிய காமராஜரின் வழியில் 'நல்ல மனிதர்கள்' உருவாக வேண்டியதே இன்றைய கால கட்டத்தின் அவரசத் தேவையாகும். 'நல்ல மனிதர்களை' உருவாக்கும் விதமான கல்வி மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். அதாவது சிந்திக்கும் மூளை (Head to think) செயல்படும் கரங்கள் (Heads to serve) கருணை காட்டும் இதயம் (Heart to feel good) என்பதாகும்.

தனக்குமட்டும் நன்மை தரும்விதமாக குறுகிய நோக்கில் சிந்திக்காமல், சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் நன்மை தரும்விதமாகச் சிந்திக்கும்படியாக இன்றைய மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, அறிவியலுடன் அறவியலையும் மனிதநேயத்தையும் பொருளாதாரத்துடன் தேசப்பற்றையும் மாணவர்களுக்குக் கற்றுத் தரவேண் டும்.

என்ன வேண்டும் இளைஞர்களுக்கு? - எந்த வேலையிலும் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்த வேலையைச் செய்யும் விதத்தில்தான் ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதை உணர்ந்து சொந்தக் காலில் நிற்கவும், சுயமாக உழைத்து உயரவும் தேவையான தன்னம்பிக்கையும், துணிச்சலும், மனிதநேயமும், கருணையுள்ளமும் உடையவர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

மொழி, மதம், நம்பிக்கை (Faith) போன்றவற்றால் மாறுபட்டு இருந்தாலும் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் அதாவது தன்மானம் மிக்க தமிழர்களாகவும், இதயம் கொண்ட இந்தியர்களாகவும் மாண்புநிறைந்த மனிதர்களாகவும் இளைஞர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

நாம் செய்யும் நன்றிக் கடன்: ‘கல்வி கற்பதும் அறிவு பெறுவதும் அன்பு செய்யவே, அன்பு செய்வதும் பண்பு காப்பதும் அறம் வளர்க்கவே' என்பதை மாணவர்கள் நெஞ்சில் பதியவைப்பதின் மூலமாக, கல்விசாலைகளை நிறுவிய கல்விக் கண் திறந்தமகானாகிய பெருந்தலைவர் 'பாரத ரத்னா' காமராஜருக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும்.

- முனைவர் கவிதாசன் செயலாளர், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் இண்டர்நேஷனல் பள்ளி, கல்லாறு, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

short essay about kamarajar in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல: தமிழக அரசின் தடையை எதிர்த்து டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் வாதம்
  •   ஜெருசலேம் யாத்திரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தல்
  •   கட்டுமான தொழில்நுட்பம் குறித்த படிப்பு அறிமுகம்
  •   துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

What’s your reaction? 4 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

short essay about kamarajar in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

Kamarajar Birthday Speech Tamil

கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை | Kamaraj Speech in Tamil

Naan Virumbum Thalaivar Kamarajar Katturai in Tamil: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். காமராஜர் (Kamaraj) 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு பிறந்தார். முதலில் அவருக்கு காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் என காமராஜருக்கு பல முகங்கள் உண்டு. 1960-களில் இந்திய அரசியலின் கிங்மேக்கர் என அழைக்கப்பட்ட காமராஜர், தமிழகத்தில் பெருந்தலைவர் என போற்றப்படுகிறார். இவரை பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதுவோம் வாங்க.

காமராஜர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் தெரியுமா.?

நான் விரும்பும் தலைவர் காமராஜர் கட்டுரை | Kamarajar Birthday Speech Tamil:

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர், பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இத்தகைய கல்வியின் நாயகனான காமராஜர் பற்றிய கட்டுரையை இப்பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

இளமை பருவம்:

கர்மவீரர் காமராஜர் அவரது ஆரம்ப கல்வியை தனது ஊரில் பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். இவரது 6 -வது வயதின் போது அவருடைய தந்தையை இழந்ததால் அவரது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் → காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள்

அரசியல் பணி:

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர். தனது 16 -வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரசில் தன்னை இணைந்து கொண்டார்.

1930-ஆம் ஆண்டு சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம் நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறகு அடுத்த ஆண்டே காந்தி இரவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள் சென்னையில், “வாள் சத்தியகிரகத்தை தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரத்திற்குத் தலைமைத் தாங்கினார்.

மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு  சிறைத்தண்டனை அனுபவித்தார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் → காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

1936-ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.

தமிழக முதல்வராக:

1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.

கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

கல்வி கண் திறந்த வள்ளல் கவிதை

தொழில்துறை:

  • தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்களை போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
  • நெய்வேலி நிலக்கரித் திட்டம்.
  • பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை.
  • திருச்சி பாரத் ஹெவி எலக்ரிக்கல்ஸ்.
  • கல்பாக்கம் அணு மின்நிலையம்.
  • ஊட்டி கச்சா ஃபிலம் தொழிற்சாலை.
  • கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை.

நீர்ப்பாசனம்:

  • மேட்டூர் கால்வாய்திட்டம்.
  • பவானி திட்டம்.
  • காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்.
  • மணிமுத்தாறு, அமராவதி, வைகை சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களையும் ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவர்:

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின் படி அக்டோபர் 2, 1963- ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.

1963 அக்டோபர் 9-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1964-ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.

1966-ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48-வது  வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 தேதி தன்னுடைய 72 -வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது

காமராஜர் பற்றி கட்டுரை

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil |  ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்
  • கல்வி கண் திறந்தவர் கட்டுரை
  • Kalvi Kanthirantha Kamarajar katturai In Tamil

இந்த பதிவில் “ கல்வி கண் திறந்தவர் கட்டுரை ” பதிவை காணலாம்.

கல்வி புரட்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் “கல்வி கண் திறந்தவர்” என்று மக்களால் அழைக்கப்படுகின்றார்.

குறிப்பு சட்டகம்

இளமைக்காலம், விடுதலைப் போரில் காமராசரின் பங்களிப்பு, கல்விப் பணிகள், படிக்காத மேதை.

இன்றைய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கல்வி நிலையங்கள், பள்ளிகள் போன்றன பெருமளவில் பங்களிப்புச் செய்கின்றன.

ஆனால் ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களின் வீட்டில் தங்கி மாணவர்கள் கல்வியைக் கற்று வந்தனர். பின்னர் நாள்தோறும் ஆசிரியர் வீட்டிற்குச் சென்று பயின்றனர். இதனை அடுத்து பொதுவானதொரு இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.

இன்று பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. நவீன முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் தான் படிக்காத மேதை கல்விக்கண் திறந்த காமராசர் ஆவார். காமராசர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காமராசர் அவர்கள் 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தனது இளம்வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் தனது படிப்பை இடையிலேயே நிறுத்தி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவரது குடும்பத்திற்கு வறுமை மட்டுமே சொத்தாக இருந்தது. இத்தகைய குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார்.

செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தனது அரசியல் அறிவையும் நாட்டுப்பற்றையும் வளர்த்துக்கொண்டார். இவைதான் இவர் விடுதலைப்போரில் பங்குபெறத் தூண்டியது எனலாம்.

காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட காமராசர் அவர்கள் காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்து கொண்டார்.

சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டங்களில் போன்றவற்றில் தன்னை ஈபடுத்திக்கொண்டார்.

1953ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக கடமையாற்றி கல்விக்குப் பல பங்களிப்பினைச் செய்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் பணியை குருகுலக் கல்வி திட்டத்தை கைவிட்டார். கல்வியின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்திருந்த காமராசர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை திறந்தார்.

கட்டாயக்கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களையும் வகுத்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழ் பெற பங்காற்றினார்.

முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் 4260 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு 6076 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

காமராசர் அவர்கள் ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் புகழ் பெற்றவராவார். எந்தவிதமான சிக்கல்களையும் மிகவும் சுலபமாகத் தீர்த்து கொள்ளும் திறமை உடையவராவார்.

படிக்காதவராக இருந்தாலும் உலக அறிவு அவருக்கு நிறையவே இருந்தது.

“நான் பாடப்புத்தகத்தில் புவியைப் படிக்கவில்லை ஆனால் நாட்டில் எத்தனை ஏரி, குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும்” என்று கூறுவார்.

இதனால்தான் காமராஜர் படிக்காத மேதை எனப் போற்றப்படுகின்றார்.

எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்விப் படிப்பினை பாதியில் தொடர முடியாமல் போனாலும் கல்விக்காக கல்விக்கண் திறந்த தேசியத்தலைவர் என்றென்றும் போற்றுதற்கு உரியவர் ஆவார்.

You May Also Like:

  • Kalvi Kanthirantha Kamarajar
  • கல்வி கண் திறந்தவர்

All Copyright © Reserved By Tamil Katturai 2023

  • இன்றைய ராசி பலன்
  • வார பலன் | Vara rasi palangal
  • மாத பலன் | Matha rasi palan
  • குரு பெயர்ச்சி பலன்கள்
  • சனி பெயர்ச்சி பலன்கள்
  • ராகு கேது பெயர்ச்சி
  • ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
  • தமிழ் கதைகள் | Tamil stories for reading
  • சுவாரஸ்ய தகவல்கள்
  • கடவுளின் அற்புதங்கள்
  • சமையல் குறிப்புகள்

Dheivegam.com

காமராஜர் கட்டுரை | Kamarajar katturai in Tamil

Kamarajar katturai in Tamil

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar speech in Tamil

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது. அந்த வகையில் நான் விரும்பும் தலைவர் என்ற வகையில் பெருந்தலைவர் காமராஜர் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையை (Kamarajar katturai in Tamil) இங்கு பார்ப்போம் வாருங்கள்.

Kamarajar katturai in Tamil

காமராஜர் கட்டுரை – Kamarajar katturai in Tamil :

நான் விரும்பும் தலைவர் காமராசர் தோற்றம் – காமராஜர் கட்டுரை

Kamarajar katturai in Tamil: 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராசர்(Kamaraj). பெற்றோர் இவருக்கு முதலில் காமாட்சி என பெயர் வைத்தனர். அந்தப் பெயரை பின்பு “காமராஜர்” என மாற்றினர்.

கல்வி கற்க முடியாத காரணம் – Kamaraj Speech in Tamil

காமராஜர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை விருதுநகரில் சத்திரிய பாடசாலையில் படித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக, அவரது தந்தை இறந்து போனார். தன் வறுமைநிலை காரணமாகவும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய காரணமாகவும் காமராஜர் தனது மேற்படிப்பை தொடர முடியாமல் போனது. பள்ளிக் கல்வியை தொடர முடியாத காமராசர், தனது மாமா சொந்தமாக வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிய தொடங்கினர்.

இந்திய விடுதலை போராட்டம் – Kamarajar katturai in Tamil language

Kamarajar Tamil Katturai: காமராஜர் பிறந்த பொழுது இந்திய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம் என்பதால் தனது இளம் வயது முதலே இந்திய விடுதலை போராட்டங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் தன்னுடைய 16 வது வயதில், அதாவது 1919 ஆம் ஆண்டு அப்பொழுது இந்திய விடுதலைக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

Speech about kamarajar in Tamil

உணவில் சேர்க்கும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததால் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி என அழைக்கப்படும் திரு. இராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வேதாரண்யம் பகுதிக்கு உப்பு காய்ச்ச செல்லும் பேரணியில் பங்கேற்ற காமராஜர், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு 1931 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கையெழுத்தான காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராஜர் உட்பட அனைத்து சுதந்திரப்போராட்ட கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கேரளத்தில் வைக்கம் சத்தியாகிரகம், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் நடைபெற்ற கொடி சத்தியாகிரகம் உள்ளிட்ட ஏராளமான சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் காமராசர் பங்கேற்றார். மேலும் சென்னையில் வாள் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.

கட்சி பொறுப்பில் காமராஜர் – Kamarajar Katturai In Tamil Language

Kamarajar patri katturai in Tamil: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர் தன் வாழ்நாளில் மொத்தம் 6 முறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயலாற்றினார் 1936 -ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரான திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தனது கட்சியின் செயலாளராக திரு. காமராஜரை நியமித்தார். திரு. சி. சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக காமராசர் மதித்துப் போற்றினார்.

தமிழக முதலமைச்சர் காமராஜர் – Kamarajar katturai in Tamil

1953 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த திரு ராஜகோபாலாச்சாரி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு தமிழகமெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக ராஜகோபாலாச்சாரி பதவி விலகினார். எனினும் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களை முன்மொழிந்தார்.

Kamarajar katturai in Tamil

இறுதியில் சி. சுப்பிரமணியம் மற்றும் அவரின் ஆதரவாளரும், பிற்கால தமிழக முதலமைச்சருமான திரு. பக்தவச்சலம் அவர்களை காட்டிலும், காமராஜர் பெருவாரியான காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவு பெற்று 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் மற்றும் திரு பக்தவச்சலம் அவர்களையும் தனது அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் காமராஜர் முதல் வேலையாக திரு. ராஜகோபாலாச்சாரி அவர்கள் கொண்டுவந்த குலக்கல்வித் திட்ட முறையை ஒழித்து, பல்வேறு காரணங்கள் கூறி மூடப்பட்டிருந்த 6,000 திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்தார்.

கல்வி கண் திறந்த காமராஜர் – Kamarajar speech in Tamil

கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை: தன் சிறு வயதில் வறுமை காரணமாக கல்வி கற்க முடியாமல் போனதை எண்ணி எப்போதும் வருந்திய காமராஜர், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது எனக் கருதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 17,000திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தார்.

அத்தோடு மட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் வறுமையின் காரணமாக சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட பள்ளி குழந்தைகள் சாப்பிட, “மதிய உணவு திட்டம்” எனும் அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களில் சிறந்தது இது தான் என போற்றப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. காமராஜர் பள்ளி கல்வி துறையில் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கையால் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக காமராஜர் “கல்வி கண் திறந்த காமராஜர்” என சிறப்பு பட்டதோடு அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

Kamarajar katturai in Tamil

காமராஜரின் தொழில்துறை சிறப்பு திட்டம் – Kamarajar history in Tamil katturai

Kamarajar katturai in Tamil language: இந்தியாவில் தொழில் துறை மிக சிறப்பாக இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும் என தொலைநோக்கு சிந்தனை கொண்ட காமராஜர், பல தொழில் துறைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்கிற புகழ் பெற்றார் அந்த வகையில்

  • சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
  • திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்
  • கல்பாக்கம் அணுமின் நிலையம்
  • ஊட்டி பிலிம் தொழிற்சாலை
  • கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனம்

போன்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க வழிவகை செய்தார். காமராஜர் அவர்கள் இத்தகைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைத்து அன்றைய காலத்தில் தமிழகத்தில் இருந்த வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை குறைக்க முயற்சி செய்தார்.

காமராஜரின் நீர்ப்பாசன திட்டங்கள் – Kamarajar katturai in Tamil

காமராஜரின் புகழை பறைசாற்றும் மற்றொரு திட்டமாக அவரின் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாசன திட்டங்கள் இருந்தன அந்த வகையில்

  • மேட்டூர் கால்வாய் திட்டம்
  • பவானி அணை நீர்த்தேக்கத் திட்டம்
  • காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

காமராஜர் கட்டிய அணைகள் (Kamarajar important points in Tamil) – காமராஜர் கட்டுரை

  • மணி முத்தாறு
  • கிருஷ்ணகிரி
  • புள்ளம்பாடி

போன்ற பல அணைகளை கட்டி தமிழகத்தில் நதி நீரை நம்பி செய்யப்பட்ட, வேளாண் தொழில் சிறக்க வழி வகை செய்தார். இதுவரை தமிழகத்தில் அதிகம் அணை கட்டிய தலைவர் என்கிற பெருமையையும் காமராஜர் பெறுகிறார்.

Kamarajar pechu potti in Tamil

இளைஞர்களுக்கு வாய்ப்பு – காமராஜர் கட்டுரை

1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் 1963ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகாலம் தமிழகத்தை மிக சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். எனினும் காங்கிரஸ் கட்சியிலும், அரசியல் ரீதியான நிர்வாகப் பொறுப்புகளிலும் இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்தும் விதமாக தன் முதலமைச்சர் பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, காமராசர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் தன்னைப் போலவே நாடு முழுவதும் இருக்கின்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். காமராஜரின் இந்த திட்டத்தை ஆங்கிலத்தில் அவரின் பெயரின் முதல் எழுத்தான K கொண்டு K – PLAN என அழைக்கப்பட்டது.

காமராஜருக்கு இருந்த இத்தகைய செல்வாக்கை கண்டு வியந்த அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவரும், இந்திய பிரதமருமான ஜவகர்லால் நேரு, காமராஜரை 1963-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார். காமராஜர் அவர்கள் இறக்கும் வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார்.

கிங்மேக்கர் காமராஜர் – காமராஜர் கட்டுரை

1964 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் நேரு இறந்த பிறகு காமராஜர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டிருந்த நிலையில், தான் அந்த பதவியை ஏற்காமல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுதந்திர போராட்ட வீரரான திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களை பிரதமராக முன்மொழிந்தார்.

1966 ம் ஆண்டு தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தாஷ்கண்ட் நகருக்கு சென்ற லால்பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் இறந்த பொழுது, அடுத்த பாரத பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது மறைந்த முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்களின் மகளான திருமதி. இந்திரா காந்தியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார்.

தான் பிரதமராக 2 முறை வாய்ப்புகள் வந்த பொழுதும், அப்பதவியை ஏற்காமல் மற்றவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என அவரின் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் அழைத்தனர்.

காமராஜர் இறப்பு – காமராஜர் கட்டுரை

தன் வாழ்நாளில் மக்களுக்கான பல மகத்தான திட்டங்களை செயல்படுத்திய காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தனது 72வது வயதில் காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அப்போதைய தமிழக அரசால் காமராஜரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. ஏராளமான அவரது தொண்டர்களும், லட்சக்கணக்கான மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மனிதருள் மாணிக்கம் காமராஜர் – Kamarajar katturai in Tamil

காமராஜர் எப்போதும் எளிமையை விரும்பிய ஒரு மனிதராக இருந்தார். அவர் தான் எப்போதும் கதர் ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார். திருமணம் செய்து கொண்டால் மக்கள் சேவை பாதிக்கப்படும் என திருமணம் தவிர்த்து தியாக வாழ்க்கை வாழ்ந்தார். தான் அரசியல் தலைவராக இருந்தாலும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் எத்தகைய சிறப்பு சலுகைகளையும் அரசு அதிகாரிகள் தனக்கு தெரியாமல் கூட செய்யக் கூடாது என்பதில் மிக கண்டிப்புடன் இருந்தார். முதல்வரான தனக்கு வழங்கப்படுகின்ற அதிக பட்சமான காவல்துறை பாதுகாப்பு என்பது தன் சார்பில் அரசுக்கு செய்யும் வீண் செலவு என கருதி அதை தவிர்த்தார்.

  • ஒரு ஜோடி செருப்பு
  • நான்கு சட்டைகள்
  • நான்கு வேஷ்டிகள்
  • சில புத்தகங்கள்

இதுவே திரு காமராஜர் அவர்கள் தனது ஒன்பது ஆண்டு கால முதல்வராக இருந்த பொழுது சம்பாதித்த சொத்துக்கள் எனவும், இது அவரின் நேர்மைக்கும், ஊழல் கரை படியாத கரங்களுக்கும் ஒரு சான்று என அவரை எளிமை மற்றும் நேர்மையின் உருவமாக வணங்கும் மக்கள் கருதுகின்றனர்.

RELATED ARTICLES MORE FROM AUTHOR

dr radhakrishnan history in tamil

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil

Karikala cholan history in Tamil

கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil

short essay about kamarajar in tamil

அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil

சமூக வலைத்தளம்.

Academic Test Guide

Essay on Kamarajar in English for Students

We are Sharing an Essay on Kamarajar in English for students and children. In this article, we have tried our best to provide a short Kamarajar Essay in 100, 150, 200, 300, and 500 words.

Essay on Kamarajar in english

5 Lines on Kamarajar 

1 The birthday of Kamarajar is celebrated as Education Development Day.

2 He worked hard to improve education and help people, especially children.

3 Kamarajar was simple and kind, always caring for others.

4 In Indian Politics, he is referred to as the “Kingmaker”.

5 He is known for his honesty and dedication to public service.

( Essay-1 ) 10 Lines Short Essay on Kamarajar in English

Kamarajar Essay in English in 100 words

1 Kamarajar, also known as Perunthalaivar K. Kamarajar, was a beloved leader of Tamil Nadu.

2 He was born on July 15, 1903, in a small village called Virudhunagar.

3 Kamarajar believed in the power of education and worked hard to make it accessible to all children.

4 He introduced the Midday Meal Scheme, providing nutritious meals to school children, and encouraging them to attend school.

5 Kamarajar opened thousands of schools and made education free for all children up to the secondary level.

6 He was passionate about social justice and worked to empower marginalized groups like Dalits and women.

7 As the Chief Minister of Tamil Nadu, Kamarajar introduced many important reforms, including the “Kamarajar Plan” for sharing power.

8 He believed in grassroots democracy and introduced Panchayati Raj institutions to give power to local communities.

9 Kamarajar’s legacy continues to inspire leaders and citizens, reminding us of the importance of service and education.

10 He was a true leader of the people, dedicated to making Tamil Nadu a better place for everyone.

10 Lines on Tamil Nadu

( Essay-2 ) Kamarajar Essay Writing for students in 300 words

Kamarajar Speech in English

Kamarajar, also known as Perunthalaivar K. Kamarajar, was a leader loved by the people of Tamil Nadu. He was born on July 15, 1903, in a small village called Virudhunagar. Kamarajar grew up in a poor family, but he always believed in the power of education and hard work.

When Kamarajar was young, India was under British rule. He joined the Indian National Congress (INC) and became a part of the freedom movement. He wanted to help make India free from British rule so that everyone could live a better life.

Kamarajar was a simple and humble person. He worked hard to improve the lives of ordinary people. He believed that everyone, no matter how poor, deserved a chance to get a good education.

One of Kamarajar’s biggest achievements was the Midday Meal Scheme. He introduced this scheme to provide nutritious meals to school children. This helped children from poor families get proper food and encouraged more kids to go to school.

Kamarajar was also passionate about making sure everyone had access to education. He opened thousands of schools and made education free for all children up to the secondary level. Thanks to his efforts, more children in Tamil Nadu were able to go to school and learn.

Kamarajar cared deeply about social justice. He wanted to make sure that everyone, regardless of their background, had equal opportunities. He worked to empower marginalized groups like Dalits and women, giving them a voice in society.

As the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, Kamarajar introduced many important reforms. He believed in sharing power with everyone, so he came up with the “Kamarajar Plan.” This plan rotated ministers in the government, so everyone had a chance to serve and make decisions.

Kamarajar also believed in democracy at the grassroots level. He introduced Panchayati Raj institutions, giving power to local communities to govern themselves. This helped people in rural areas have a say in how their villages were run.

Kamarajar’s legacy lives on even today. His ideas and work have inspired many leaders and continue to make a positive impact on society. He was a true leader of the people, always putting their needs first and working tirelessly to make Tamil Nadu a better place for everyone.

( Essay-3 ) Essay on Kamarajar in English ( 500 words )

Introduction:

Kamarajar, also known as Perunthalaivar K. Kamarajar, was a visionary leader and statesman who played a pivotal role in shaping the political landscape of Tamil Nadu. His dedication to social justice, education, and grassroots democracy earned him the admiration and respect of millions of people. In this essay, we will explore the life, contributions, and enduring legacy of Kamarajar.

Early Life and Education:

Kamarajar was born on July 15, 1903, in a small village called Virudhunagar in Tamil Nadu. He came from a humble background, and his early life was marked by financial struggles. Despite facing adversity, he understood the importance of education and attended the local school in his village. However, he had to drop out at a young age to support his family.

Entry into Politics:

Kamarajar’s entry into politics was influenced by his desire to uplift the marginalized sections of society. He joined the Indian National Congress (INC) at a young age and quickly rose through the ranks due to his organizational skills and dedication to the cause of independence. He became actively involved in the Indian independence movement and participated in various protests and agitations against British colonial rule.

Leadership and Reforms:

Kamarajar’s leadership abilities were soon recognized within the INC, and he was appointed as the President of the Tamil Nadu Congress Committee in 1940. During his tenure, he initiated several reforms aimed at improving the lives of ordinary citizens. One of his most significant contributions was the introduction of the Midday Meal Scheme, which provided nutritious meals to school children, thereby addressing the issue of malnutrition and increasing school enrollment.

Education Revolution:

Kamarajar was a staunch advocate of education and believed that it was the key to social and economic progress. He implemented several measures to promote education, including the establishment of thousands of schools and the introduction of free education for all up to the secondary level. His efforts led to a significant increase in literacy rates and paved the way for the development of Tamil Nadu as an educational hub.

Social Justice and Welfare:

Kamarajar’s commitment to social justice was reflected in his policies and programs aimed at uplifting the disadvantaged sections of society. He championed the cause of Dalits, women, and other marginalized communities, ensuring their representation in governance and decision-making processes. He also initiated welfare schemes such as subsidized food grains and housing for the poor, laying the foundation for a more equitable society.

Political Reforms and Grassroots Democracy:

As the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, Kamarajar implemented several political reforms aimed at decentralizing power and promoting grassroots democracy. He introduced the concept of the “Kamarajar Plan,” which advocated for the rotation of ministers to prevent the concentration of power and promote accountability. He also pioneered the system of local self-governance through Panchayati Raj institutions, empowering rural communities and strengthening democracy at the grassroots level.

Legacy and Impact:

Kamarajar’s legacy continues to inspire generations of leaders and citizens alike. His emphasis on education, social justice, and grassroots democracy laid the foundation for Tamil Nadu’s development and progress. His Midday Meal Scheme, in particular, has been replicated across India and has become a model for addressing malnutrition and increasing school enrollment. Kamarajar’s contributions to the nation were recognized with several awards and honors, including the Bharat Ratna, India’s highest civilian award, in 1976.

Conclusion:

In conclusion, Kamarajar was a visionary leader whose progressive ideas and tireless efforts transformed the social, political, and educational landscape of Tamil Nadu. His legacy serves as a guiding light for aspiring leaders and underscores the power of visionary leadership in driving positive change and transformational growth. Kamarajar’s life and contributions continue to inspire millions, reaffirming his status as one of India’s most revered statesmen.

FAQ about Kamarajar

1 Who was K. Kamaraj? Kumaraswami Kamaraj, commonly known as K. Kamaraj, was a prominent Indian political leader who served as the Chief Minister of Madras State (now Tamil Nadu) from 1954 to 1963. He was also a key figure in the Indian National Congress and played a significant role in shaping the political landscape of India.

2 What was the Kamaraj Plan? The Kamaraj Plan, proposed by K. Kamaraj, was a political initiative aimed at rejuvenating the Indian National Congress party. It called for senior leaders to resign from ministerial positions and work for the party organization, allowing younger leaders to take on more prominent roles. This plan was instrumental in bringing fresh talent into the party leadership and revitalizing its organizational structure.

3 What were some of Kamaraj’s major achievements as Chief Minister? During his tenure as Chief Minister of Madras State, Kamaraj introduced several groundbreaking initiatives focused on education, social justice, and economic development. One of his most notable achievements was the implementation of the midday meal scheme in schools, which aimed to improve attendance and address malnutrition among children. He also championed women’s rights and empowerment, introducing measures such as reservations in local bodies and educational institutions.

4 How did Kamaraj influence national politics? K. Kamaraj played a significant role in shaping national politics, particularly within the Indian National Congress. He was instrumental in bringing about the appointment of Lal Bahadur Shastri as the Prime Minister of India after Jawaharlal Nehru’s death in 1964. His efforts to promote unity and consensus within the Congress party earned him respect and admiration from leaders across the political spectrum.

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

ExamUpdates.in Logo 1x Size

Kamarajar Essay in English in 100 words, 1000 words & 10 Lines

  • Exam Updates
  • November 2, 2023

Kamarajar Essay : Discover the life and legacy of Perunthalaivar Kamarajar in this insightful essay. Explore the remarkable journey of one of Tamil Nadu’s most beloved leaders, his contributions to education, politics, and social reform, and the enduring impact of his leadership. In this article, we’ve provided Kamarajar Essay in English in 100 words, 500 words, 1000 words & 10 lines.

This essay delves into the biography of Kamarajar, his pivotal role in shaping Tamil Nadu’s history, and his enduring commitment to public service. Whether you are a student researching this iconic leader or simply interested in the rich history of Tamil Nadu, this essay provides a comprehensive overview of Kamarajar’s life, achievements, and the lasting influence he has had on the state and its people.

About Kamarajar in 10 Lines

Kamarajar: The People’s Leader – A Short Essay in 10 Lines

Perunthalaivar Kamarajar, a revered leader in Tamil Nadu’s history, is remembered for his remarkable contributions and simple yet powerful leadership style.

  • Born in 1903, Kamarajar emerged from humble beginnings to become a prominent political figure in India.
  • His early political career was marked by dedication to the Indian National Congress and the struggle for independence.
  • Kamarajar’s visionary leadership as Tamil Nadu’s Chief Minister from 1954 to 1963 brought about significant educational reforms.
  • He introduced the groundbreaking Mid-day Meal Scheme to improve school attendance and child nutrition.
  • Simplicity and accessibility were hallmarks of Kamarajar’s leadership, earning him the affectionate title “Karmaveerar.”
  • His commitment to social justice led to policies that reduced economic disparities and improved the lives of the underprivileged.
  • Kamarajar’s legacy endures through Tamil Nadu’s thriving educational institutions and the national adoption of the Mid-day Meal Scheme.
  • He remains an inspiration for leaders and citizens dedicated to public service and social welfare.
  • Kamarajar’s life is a testament to the power of leadership driven by a genuine desire to serve the people.
  • Perunthalaivar Kamarajar’s name is synonymous with a leader who touched the hearts of the masses, leaving an indelible mark on Tamil Nadu’s history.

Also See: Azadi Ka Amrit Mahotsav Essay

Short Essay on Kamarajar in 100 words

Kamarajar, born in 1903 in Tamil Nadu, is celebrated as a revered leader known for his simplicity and dedication to public service. He played a pivotal role in the Indian independence movement and later served as Tamil Nadu’s Chief Minister from 1954 to 1963. Kamarajar’s leadership was marked by his vision for education and social justice. He introduced the groundbreaking Mid-day Meal Scheme to enhance child nutrition and school attendance. His commitment to the welfare of the underprivileged and his accessibility earned him the title “Karmaveerar.” Kamarajar’s legacy lives on through Tamil Nadu’s thriving educational institutions and his enduring influence as a symbol of dedicated leadership.

Kamarajar Essay in English in 1000 Words

Kamarajar: The Leader of the Masses

Introduction

Perunthalaivar Kamarajar, affectionately known as the “Kingmaker” and the “Man of the Masses,” was a remarkable leader whose life and contributions left an indelible mark on the history of Tamil Nadu and India as a whole. Born on July 15, 1903, in Virudhunagar, Tamil Nadu, Kamarajar’s journey from a humble background to becoming a revered political figure and a beloved leader is a testament to his unwavering commitment to public service and social welfare.

Early Life and Political Beginnings

Kamarajar’s early life was characterized by simplicity and modesty. He received limited formal education but possessed an innate drive for self-improvement. His political journey began in the Indian National Congress, where he was mentored by leaders like S. Satyamurti and C. Rajagopalachari. Kamarajar quickly rose through the ranks, gaining recognition for his dedication and commitment to the cause of Indian independence.

Leadership and Vision

Kamarajar’s leadership was defined by his vision for a progressive and egalitarian society. He firmly believed that education was the cornerstone of social development. During his tenure as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, he implemented a series of far-reaching reforms in the state’s education system. His contributions included the introduction of the Mid-day Meal Scheme, which aimed to provide nutritious meals to school children, thereby improving attendance and nutrition levels.

Education was not the only focus of Kamarajar’s visionary leadership. He also worked tirelessly to uplift the underprivileged and marginalized sections of society. His commitment to social justice led to the formulation of policies and initiatives that aimed at reducing economic disparities and improving the quality of life for all citizens.

The Man of Simplicity

What set Kamarajar apart from many other political leaders was his simplicity and accessibility. He shunned extravagance and lived a life of austerity. His residence was a modest thatched-roof hut, reflecting his commitment to a simple and unpretentious lifestyle. People from all walks of life could approach him without hesitation, earning him the affectionate title of “Karmaveerar,” which means “Hero of Work.”

Enduring Legacy

Kamarajar’s legacy is enduring and multi-faceted. His contributions to education and social justice continue to shape Tamil Nadu’s progress and development. His emphasis on providing quality education to the masses paved the way for a highly educated and skilled workforce in the state. Today, Tamil Nadu boasts some of the country’s top educational institutions, a testament to Kamarajar’s vision.

Kamarajar’s impact extended beyond Tamil Nadu. His Mid-day Meal Scheme, initially implemented in Tamil Nadu, was later adopted as a national program in India, benefitting millions of school children across the country.

In conclusion, Perunthalaivar Kamarajar’s life and legacy are a source of inspiration for leaders and citizens alike. His commitment to education, social justice, and public service remains a guiding light for those dedicated to the welfare of society. Kamarajar’s leadership style, characterized by simplicity, humility, and accessibility, serves as a timeless example of what true leadership should be. His name is etched in history as a leader who not only touched the lives of the masses but also left an enduring legacy of progress, equality, and social welfare. Perunthalaivar Kamarajar will always be remembered as the leader who worked tirelessly to uplift the common people and champion their cause.

Also See: As One Journey Ends Another Begins Essay

Kamarajar Essay in 500 Words

Kamarajar – The Leader Who Touched Hearts

Perunthalaivar Kamarajar, a name etched in the annals of Tamil Nadu’s history, is a beloved figure known for his extraordinary contributions to education, politics, and social reform. His life and legacy continue to inspire generations.

Kamarajar, born on July 15, 1903, in Virudhunagar, Tamil Nadu, rose from humble beginnings to become a prominent leader. His political career began in the Indian National Congress, where he quickly gained recognition for his unwavering commitment to public service.

One of Kamarajar’s most notable achievements was his instrumental role in the implementation of the mid-day meal scheme in schools. This initiative, which started in Tamil Nadu and later spread to other parts of India, aimed to provide nutritious meals to school children, thus improving attendance and nutritional outcomes.

Education was a cause close to Kamarajar’s heart. He believed that education was the key to social progress. During his tenure as the Chief Minister of Tamil Nadu from 1954 to 1963, he took significant steps to improve the state’s education system. He introduced several reforms, including the enhancement of school infrastructure and the expansion of educational opportunities for the underprivileged.

Kamarajar’s leadership style was characterized by simplicity, accessibility, and a deep commitment to the welfare of the common people. He earned the nickname “Karmaveerar” or “Hero of Work” due to his dedication to public service. His humility and approachability endeared him to people from all walks of life.

Despite his influential political career, Kamarajar remained rooted in his values and never lost sight of his mission to uplift the underprivileged. He was a champion of social justice, advocating for the rights and welfare of marginalized communities.

Kamarajar’s legacy extends beyond his time in office. His impact on Tamil Nadu’s development, particularly in the fields of education and social reform, is still visible today. His vision and dedication continue to inspire leaders and citizens alike.

In conclusion, Perunthalaivar Kamarajar’s life and work exemplify the power of leadership driven by a genuine desire to serve the people. His contributions to education, politics, and social justice have left an indelible mark on Tamil Nadu’s history. Kamarajar’s enduring legacy reminds us that true leaders are those who touch the hearts of the people and work tirelessly for the betterment of society.

Exam Updates WhatsApp Channel Join Now
Exam Updates Telegram Channel Join Now

Related Posts

Shivaji jayanti essay in 500 words, 1000 words,10 lines, save water essay in 10 lines, 100 words, 500 words, saraswati puja essay in 10 lines, 100, 500 words, republic day essay in 150 words, 500 words & 10 lines, nursing essay in 10 lines, 100, 1000, 500 words, my favourite game kho kho essay in 10 lines, 100 & 500 words, my favorite leader essay in 10 lines, 100, 500, 1000 words, maulana abul kalam azad essay – 100, 500, 1000 words, 10 lines, lohri essay in 10 lines & 100, 500 words for students, green india essay in 10 lines, 100, 1000 words, leave a reply.

Your email address will not be published. Required fields are marked *

Name  *

Email  *

Add Comment  *

Post Comment

English Summary

Short Essay on Kamarajar in English

Kamarajar, also known as Perunthalaivar Kamaraj, was a renowned political leader and freedom fighter from Tamil Nadu, India. He played a pivotal role in shaping the socio-political landscape of the state and left an indelible mark on Indian politics. Born on July 15, 1903, in a humble family, Kamarajar’s journey exemplifies dedication, simplicity, and unwavering commitment to public service.

Kamarajar’s political career soared when he became the Chief Minister of Madras State (now Tamil Nadu) in 1954. His administration was marked by visionary initiatives in education, rural development, and social welfare. The “Kamaraj Plan” revolutionized the education sector, introducing free education and the concept of the “Midday Meal Scheme,” ensuring that children from marginalized communities received proper nutrition while attending school. This plan significantly improved literacy rates and transformed the lives of countless children.

Despite his immense popularity and contributions, Kamarajar remained humble and grounded. He voluntarily stepped down from the Chief Minister’s position in 1963, ushering in a new era of leadership and providing opportunities for younger politicians to emerge.

In conclusion, Kamarajar was a visionary leader, a true statesman, and a symbol of simplicity and integrity. His commitment to public service, emphasis on education, and dedication to the welfare of the marginalized have left an indelible legacy. Kamarajar’s life serves as an inspiration to leaders and citizens alike, reminding us of the power of selflessness and the transformative impact of genuine concern for the welfare of the people.

Related Posts:

IMAGES

  1. Kamarajar Essay In Tamil

    short essay about kamarajar in tamil

  2. 10 Lines about kamarajar in tamil

    short essay about kamarajar in tamil

  3. biography of Kamarajar/15 Lines on Kamarajar/ essay on Kumaraswami Kamara

    short essay about kamarajar in tamil

  4. kamarajar speech in tamil

    short essay about kamarajar in tamil

  5. Kamarajar Speech in Tamil PDF

    short essay about kamarajar in tamil

  6. காமராஜர் கட்டுரை

    short essay about kamarajar in tamil

COMMENTS

  1. காமராஜர் பற்றி கட்டுரை

    பிறப்பு - Kamarajar Katturai in Tamil. Kamarajar Tamil Katturai: காமராசர் விருதுநகரில் 1903-ம் ...

  2. காமராஜர் பற்றி கட்டுரை

    Kamarajar Patri Katturai In Tamil பொதுவான கட்டுரைகள் இந்த பதிவில் கர்மவீரர் " காமராஜர் பற்றி கட்டுரை " பதிவை காணலாம்.

  3. காமராஜர் பற்றி கட்டுரை: Kamarajar Katturai in Tamil Essay Speech

    For those who don't know Tamil, here is the English version of the Tamil speech about kamarajar, and the detailed History of the kamarajar essay in Tamil. naan kamarajar aanal speech in tamil. Here is the kamarajar short speech in Tamil for the competition. Introduction: Kamarajar Katturai in Tamil. Kamarasar is known for his simplicity and ...

  4. காமராஜர் பற்றிய கட்டுரை

    Kamarajar History In Tamil: காமராஜர் பல சாதனைகள் செய்த போதிலும், இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு எளிய மனிதராக ...

  5. Kamarajar history in Tamil

    kamarajar history in tamil: அப்போது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை ...

  6. காமராசர்

    காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய ...

  7. காமராஜர் வரலாறு

    மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு. English Overview: Here we have Kamarajar biography in Tamil. Kamarajar is a great Leader who lived in Tamilnadu, India. Above we have Kamarajar history in Tamil. We can also say it as Kamarajar varalaru in Tamil or Kamarajar essay in Tamil. - Advertisement -.

  8. Kamarajar Essay In Tamil காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

    Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை. radangfx October 1, 2019. Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil professor of Madurai University. Students can use it for school projects ...

  9. பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

    Kamarajar history in tamil -சென்னை கிண்டி அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிக்சர்ஸ் தொழிற்சாலை ...

  10. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

    the details about kamarajar is wonderful. Nambiraj says: March 9, 2014 at 1:37 pm. Thiru. Kamarajar avargal oru manidhar alla avar intha ulagil valntha deivam. vidhya.L says: March 15, 2014 at 3:16 pm. காமராஜரை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.நன்றி!!!

  11. காமராஜரை அறிவோம்

    காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள ...

  12. Kamarajar History in Tamil

    Kamarajar (காமராஜர்) life history in Tamil (தமிழ்) with free PDF download. காமராஜர் (Kamarajar ) வாழ்க்கை வரலாறு (Biography) தமிழில்.

  13. Kamarajar Essay

    Kamarajar Short Essay - in 100 words. This brief Kamarajar Essay provides insights into the life and contributions of K. Kamarajar, a stalwart leader in Tamil Nadu. Explore his role in education, social reforms, and governance, leaving an indelible mark on the state's development and political landscape.

  14. காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

    Kamarajar Sadhanaigal Speech In Tamil: "கிங்மேக்கர்" மற்றும் "தென்னிந்தியாவின் காந்தி ...

  15. காமராஜர் வாழ்க்கை வரலாறு

    பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு (Kamarajar Life History in Tamil) பற்றி ...

  16. கல்விக் கண் திறந்த மகான்

    நாம் செய்யும் நன்றிக் கடன்: 'கல்வி கற்பதும் அறிவு பெறுவதும் அன்பு செய்யவே, அன்பு செய்வதும் பண்பு காப்பதும் அறம் வளர்க்கவே ...

  17. காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

    கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை | Kamaraj Speech in Tamil. Naan Virumbum Thalaivar Kamarajar Katturai in ...

  18. கல்வி கண் திறந்தவர் கட்டுரை

    Kalvi Kanthirantha Kamarajar katturai In Tamil பொதுவான கட்டுரைகள் இந்த பதிவில் " கல்வி கண் திறந்தவர் கட்டுரை " பதிவை காணலாம்.

  19. காமராஜர் கட்டுரை

    மனிதருள் மாணிக்கம் காமராஜர் - Kamarajar katturai in Tamil காமராஜர் எப்போதும் எளிமையை விரும்பிய ஒரு மனிதராக இருந்தார்.

  20. K. Kamaraj

    K. Kamaraj. Kumaraswami Kamaraj (15 July 1903 - 2 October 1975), popularly known as Kamarajar was an Indian independence activist and politician who served as the Chief Minister of Madras from 13 April 1954 to 2 October 1963. He also served as the president of the Indian National Congress between 1964-1967 and was responsible for the ...

  21. Essay on Kamarajar in English for Students

    ( Essay-1 ) 10 Lines Short Essay on Kamarajar in English. Kamarajar Essay in English in 100 words. 1 Kamarajar, also known as Perunthalaivar K. Kamarajar, was a beloved leader of Tamil Nadu. 2 He was born on July 15, 1903, in a small village called Virudhunagar.

  22. Kamarajar Essay in English in 100 words, 1000 words & 10 Lines

    Kamarajar: The People's Leader - A Short Essay in 10 Lines. Perunthalaivar Kamarajar, a revered leader in Tamil Nadu's history, is remembered for his remarkable contributions and simple yet powerful leadership style. Born in 1903, Kamarajar emerged from humble beginnings to become a prominent political figure in India.

  23. Short Essay on Kamarajar in English

    Kamarajar, also known as Perunthalaivar Kamaraj, was a renowned political leader and freedom fighter from Tamil Nadu, India. He played a pivotal role in shaping the socio-political landscape of the state and left an indelible mark on Indian politics. Born on July 15, 1903, in a humble family, Kamarajar's journey exemplifies dedication ...